நூன்மரபு25

தொல்காப்பியம்
 

எழுத்ததிகாரம்
 

நச்சினார்க்கினியம்
 

1. நூன்மரபு
 

1.

எழுத்தெனப்படுப
அகரமுத
னகர விறுவாய் முப்பஃ தென்ப
சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே.
 

என்பது சூத்திரம்.
 

இவ்வதிகாரம்     என்ன    பெயர்த்தோவெனின்    எழுத்திலக்கணம்
உணர்த்தினமை காரணத்தான் எழுத்ததிகாரமென்னும்  பெயர்த்து. எழுத்தை
உணர்த்திய அதிகாரமென விரிக்க. அதிகாரம் - முறைமை.
 

எழுத்து       உணர்த்துமிடத்து       எனைத்து         வகையான்
உணர்த்தினாரோவெனின்   எட்டுவகையானும்   எட்டிறந்த பலவகையானும்
உணர்த்தினாரென்க.
 

1எட்டு வகைய வென்பார் கூறுமாறு:-எழுத்து  இனைத்  தென்றலும்,
இன்ன   பெயரின  வென்றலும்,  இன்ன  முறையின  வென்றலும்,  இன்ன
அளவின    வென்றலும்,     இன்ன   பிறப்பின   வென்றலும்,   இன்ன
புணர்ச்சியினவென்றலும்,  இன்ன  வடிவின வென்றலும், இன்ன தன்மையின
வென்றலுமாம். இவற்றுள் தன்மையும் வடிவும் நமக்கு உணர்த்தலாகாமையின்
ஆசிரியர் ஈண்டு உரைத்திலர். ஏனைய இதனுட் பெறுதும்.
 

எழுத்து   இனைத்தென்றலைத்   தொகை  வகை  விரியான்  உணர்க.
முப்பத்துமூன் றென்பது தொகை. உயிர் பன்னிரண் 


1. எட்டுவகையான  எனவும் பாடம். அப்பாடமே நலம். என்னை? முன்
எட்டுவகையானும் என்று நச்சினார்க்கினியரே வகுத்துக் கூறியிருத்தலின்.