டும் உடம்பு பதினெட்டுஞ் சார்பிற்றோற்றம் மூன்றும் அதன் வகை. அளபெடை யேழும் உயிர்மெய் யிருநூற்றொருபத்தாறும் அவற்றோடுங் கூட்டி இருநூற்றைம்பத்தாறெனல் விரி. |
இனி எழுத்துக்களது பெயரும் முறையுந் தொகையும் இச்சூத்திரத்தாற் பெற்றாம். வகை 'ஒளகார விறுவாய்' (எழு - 8) என்பதனானும், 'னகாரவிறுவாய்' (எழு - 9) என்பதனானும், 'அவைதாங், குற்றியலிகரங் குற்றியலுகரம்' (எழு - 2) என்பதனானும் பெற்றாம். விரி 'குன்றிசைமொழி வயின்' (எழு - 41) என்பதனானும், 'புள்ளியில்லா' (எழு - 17) என்பதனானும் பெற்றாம். |
அளவு 'அவற்றுள், அ இ உ' (எழு - 3) என்பதனானும், 'ஆ ஈ ஊ' (எழு - 4) என்பதனானும், 'மெய்யினளவே' (எழு - 11) என்பதனானும், 'அவ்விய னிலையும்' (எழு - 12) என்பதனானும் பெற்றாம். |
பிறப்பு பிறப்பியலுட் பெற்றாம். |
புணர்ச்சி 'உயிரிறு சொன்முன்' (எழு - 107) என்பதனானும், 'அவற்று, ணிறுத்தசொல்லின்' (எழு - 108) என்பதனானும், பிறவாற்றானும் பெற்றாம். |
இனி 1எட்டிறந்த பல்வகைய வென்பார் கூறுமாறு:- எழுத்தூக்களது குறைவுங், கூட்டமும், பிரிவும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலவாதலுந், திரிந்ததன்றிரிபு அதுவென்றலும், பிறிதென்றலும், அதுவும் பிறிதுமென்றலும், நிலையிற்றென்றலும், நிலையாதென்றலும், நிலையிற்றும்நிலையாது மென்றலும் இன்னோரன்ன பலவுமாம். |
குறைவு 'அரையளவு குறுகல்' (எழு - 13) 'ஓரளபாகும்' (எழு - 58) என்பனவற்றாற் பெற்றாம். |
கூட்டம் 'மெய்யோ டியையினும்' (எழு - 10) 'புள்ளியில்லா' (எழு - 17) என்பனவற்றாற் பெற்றாம். |
பிரிவு 'மெய்யுயிர்நீங்கின்' (எழு - 139) என்பதனாற் பெற்றாம். |
|
1. எட்டிறந்த பல வகையாவன எனவும் பாடம். அப் பாடமே நலம். என்னை? முன் எட்டிறந்த பலவகையானும் என நச்சினார்க்கினியரே வகுத்துக் கூறியிருத்தலின். |