மயக்கம் 'ட ற ல ள' (எழு -23) என்பது முதலாக 'மெய்ந்நிலைசுட்டின்' (எழு - 30) என்பதீறாகக் கிடந்தனவற்றாற் பெற்றாம். |
மொழியாக்கம் 'ஓரெழுத்தொருமொழி' (எழு -45) என்பதனாற் பெற்றாம், அவ்வெழுத்துக்களை மொழியாக்கலின். |
நிலை 'பன்னீருயிரும்' (எழு - 59) 'உயிர்மெய்யல்லன' (எழு - 60) 'உயிர்ஒள' (எழு - 69) 'ஞணநமன' (எழு - 78) என்பன. இவற்றான் மொழிக்கு முதலாம் எழுத்தும் ஈறாமெழுத்தும் பெற்றாம். |
இனம் 'வல்லெழுத்தென்ப' (எழு - 19) 'மெல்லெழுத்தென்ப' (எழு - 20) 'இடையெழுத்தென்ப' (எழு - 21) 'ஒளகாரவிறுவாய்' (எழு - 8) 'னகாரவிறுவாய்' (எழு - 9) என்பனவற்றாற் பெற்றாம். இவற்றானே எழுத்துக்கள் உருவாதலும் பெற்றாம். இவ்வுருவாகிய ஓசைக்கு ஆசிரியர் வடிவு கூறாமை உணர்க. இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும்பான்மையும் வடிவுகூறுமாறு உணர்க. |
ஒன்று பலவாதல் 'எழுத்தோரன்ன' (எழு - 141) என்பதனாற் பெற்றாம். |
திரிந்ததன்றிரிபதுவென்றல் 'தகரம் வருவழி' (எழு - 369) என்பதனானும் பிறாண்டும் பெற்றாம். |
பிறிதென்றல் 'மகரவிறுதி' (எழு - 310) 'னகாரவிறுதி' (எழு - 332) என்பனவற்றாற் பெற்றாம். |
அதுவும்பிறிதுமென்றல் 'ஆறனுருபி னகரக்கிளவி' (எழு - 115) என்பதனாற் பெற்றாம். |
நிலையிற்றென்றல் 'நிறுத்தசொல்லினீறாகு' (எழு - 108) என்பதனாற் பெற்றாம். |
நிலையாதென்றல் நிலைமொழியது ஈற்றுக்கண்ணின்றும் வருமொழியது முதற்கண்ணின்றும் புணர்ச்சி தம்முள் இலவாதல். அது 'மருவின்றொகுதி' (எழு - 111) என்பதனாற் பெற்றாம். |
நிலையிற்றும் நிலையாதுமென்றல் 'குறியதன் முன்னரும்' (எழு - 226) என்பதனாற் கூறிய அகரம் 'இராவென்கிளவிக் ககரமில்லை' (எழு - 227) என்பதனாற் பெற்றாம். |