பாராட்டிச் சென்னை அரசாட்சியார் 'ராவ் பகதூர்' எனும் பட்டத்தை யளித்துப் பெருமைப் படுத்தினர். |
'அகநானூறு' எனும் பனுவலை ஆராய்ந்து வந்தார்கள். ஆனால் தமிழ் மக்கள் இழைத்த தவக்குறையால் 1901 - ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 - ந் தேதி தமிழன்னை தலைகுனிய இவ்வுலக வாழ்வை நீத்து இறைவன் திருவடி நீழலிற் குளிர்ந்தனர். இவரை நீத்த கையாற்றுமிகையான் தமிழ்ப் புலவர் பலர் இரங்கற் பாக்களாற் தந்துயர் வெப்பத்தை ஒருவாறு ஆற்றுவாராயினர். அவற்றுள் இரு செய்யுளை மாத்திரம் இங்கே குறிப்பிடுகின்றாம். |
மகாமகோபாத்தியாய தக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் கூறியது : |
"தொல்காப் பியமுதலாந் தொன்னூல்க ளைப்பதிப்பித் தொல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்பி-னல்காத தாமோ தரச்செல்வன் சட்டகநீத் திட்டதுன்பை யாமோ தரமியம்ப வே." |
பிள்ளையவர்களை நன்கறிந்தவரும் சிறந்த ஆராய்ச்சி வல்லுநருமாய திரு.வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் அவர்கள் கூறியது : |
"காமோதி வண்டர் கடிமலர்த்தேன் கூட்டுதல்போ னாமோது செந்தமிழி னன்னூல் பலதொகுத்த தாமோ தரம்பிள்ளை சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடையார் தண்டமிழ்ச்செந் நாப்புலவீர்." |
----------- |