ரேறுமிடத்துத் தன்கண் 1அகரம் நீங்கியே போக வருகின்றதோர் உயிர் யாதாயினும் ஒன்று ஏறி நிற்குமென்பதூஉம் பெற்றாம். 'மெய்யி னியக்க மகரமொடு சிவணும்' (எழு-46) என்னுஞ் சூத்திரத்தானும் இதுவே இதற்குக் கருத்தாதல் உணர்க. |
(15) |
16. | எகர ஒகரத் தியற்கையு மற்றே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : எகர ஒகரத்து இயற்கையும் அற்றே - எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல்பிற்று என்றவாறு. |
எனவே ஏகார ஓகாரங்கட்குப் புள்ளி யின்றாயிற்று. |
எ-ஒ என வரும். |
இஃது உயிர்மெய்க்கும் ஒக்கும். |
மகரம் ஆராய்ச்சிப்பட்டது கண்டு மகரத்திற்கு வடிவு வேற்றுமை செய்து, அதிகாரத்தான் மெய்யின் தன்மை கூறி, அதன் பின் 2மாட்டேற்றலின் எகர ஒகரத்தையுங் கூறினார். |
(16) |