24. | அவற்றுள் லளஃகான் முன்னர் யவவுந் தோன்றும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : அவற்றுள் - முற்கூறிய நான்கனுள், லளஃகான் முன்னர் - லகார ளகாரமாகிய புள்ளிகளின் முன்னர், யவவுந் தோன்றும் - கசபக்களே யன்றி யகர வகரங்களும் வந்து மயங்கும் என்றவாறு. |
கொல்யானை செல்வம் வெள்யாறு கள்வன் என வரும். |
இவற்றுட் கொல்யானை என வினைத்தொகையும் வெள்ளாறு எனப் பண்புத்தொகை நிலைமொழி வருமொழி செய்வதற்கு இயையாமையின் 1'மருவின்பாத்திய' என்று கூறுவராதலின் இவ்வாசிரியர் இவற்றை ஒருமொழியாகக் கொள்வரென்று உணர்க. இக்கருத்தானே மேலும் வினைத்தொகையும் பண்புத்தொகையும் ஒருமொழியாகக்கொண்டு உதாரணங்காட்டுதும். அன்றி இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத்தொகைக்கண்ணும் பண்புத்தொகைக்கண்ணு மன்றி ஒருமொழிக்கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தனவென்று ஒழித்து உதாரணமில்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமற் போதலே நன்றென்று கூறலுமொன்று. |
(24) |
25. | ஙஞண நமன வெனும்புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : ங ஞ ண ந ம ன - எனும் புள்ளி முன்னர் - ங ஞ ண ந ம ன என்று கூறப்படும் புள்ளிகளின் முன்னர், தத்த மிசைகள் - தமக்கினமாய் முன்னின்ற க ச ட த |
|
1. 'மருவின்பாத்திய' என்பது 76-ம் சூத்திரத்தின் ஓரடி. அச்சூத்திரத்து வினைத்தொகையையும் பண்புத்தொகையையும் பிரித்து வழங்கப்படாதென்று கூறுவாராகலின் ஒரு மொழியாகக் கொள்ளப்படுமென்பது கருத்து. |