இனி 1உரையாசிரியர் உரிஞ்யாது பொருந்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாராலெனின், ஆசிரியர் ஒருமொழியாமாறு ஈண்டுக்கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங்கூறி, அதன்கண் 'மெய்யிறு சொன்முன் மெய்வருவழியும்' (எழு - 107) என்று கூறினார். கூறிப் பின்னும் 'உகரமொடு புணரும் புள்ளி யிறுதி' (எழு - 163) என்றும் பிறாண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதலின் ஈண்டு இருமொழிப்புணர்ச்சி காட்டிற் கூறியதுகூற லென்னுங் குற்றமாம். அதனால் அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க. |
(27) |
28. | மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : மஃகான் புள்ளிமுன் - முற்கூறியவற்றுள் மகரமாகிய புள்ளி முன்னர், வவ்வுந் தோன்றும் - பகர யகரமேயன்றி வகரமும் வந்து மயங்கும் என்றவாறு. |
இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின் 'வகார மிசையு மகாரங் குறுகும்' (எழு - 330) என்ற விதி வேண்டாவாம். |
(28) |
29. | யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும். |
|
இதுவும் அது. |
இதன் பொருள் : யரழவென்னும் புள்ளிமுன்னர் - ய ர ழ என்று கூறப்படும் மூன்று புள்ளிகளின் முன்னர், முதலாகெழுத்தும் - மொழிக்கு முதலாமென மேற்கூறும் ஒன்ப |
|
1. இருமொழிப்புணர்ச்சி காட்டின் கூறியது கூறலென்னும் குற்றமாமென்று நச்சினார்க்கினியர் கூறுதல் பொருந்தாது. ஏனெனில் மயக்கம் வேறு புணர்ச்சி வேறாகலின். வேறாமாற்றை, மயக்கமுள்ளனவும் இயல்பாதலன்றித் திரிந்தும் மயக்கமில்லாதன மயக்கமுள்ளனவாகத் திரிந்தும் புணர்தலானறிக. |
பொன்குடம் - பொற்குடம். இது மயக்கமுள்ளன திரிந்தன. கல்தீது - கற்றீது. இது மயக்கமில்லாதன திரிந்து புணர்ந்தன. |