64நூன்மரபு

இதன் பொருள் : அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் நரம்பின்
மறைய   என்மனார்   புலவர்  -  முற்கூறிய    உயிரும்   உயிர்மெய்யும்
மாத்திரையை   இறந்தொலித்தலும்   ஒற்றெழுத்துக்கள் அரைமாத்திரையின்
நீண்டொலித்தலும்  யாழ்  நூலிடத்தன என்று கூறுவர் புலவர், இசையொடு
சிவணிய உளவென மொழிப - அங்ஙனம் அளபிறந்தும் நீண்டும் இசைத்தல்
ஓசையோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்களுக்கும் உளவென்று கூறுவர்
ஆசிரியர் என்றவாறு.
 

எழுத்துக்கள்   முற்கூறிய   மாத்திரையை 1இறந்தொலிக்குமாறு  கண்டு,
அஃது  இறந்தொலிக்கும் இடங் கூறினார், எழுத்துஞ் சொல்லும் பொருளுங்
கிடக்கும்     இடஞ்    செய்யுளிடமாதலின்.   அது    மிக்கொலித்தலைச்
செய்யுளியலின்கண்  'மாத்திரையெழுத்திய  லசைவகையெனாஅ' (செய் - 1)
என இருபத்தாறு உறுப்பிற்குஞ் சிறப்புறுப்பாக முற்கூறிப், பின்னர்
 

'மாத்திரை யளவு மெழுத்தியல் வகையு
மேற்கிளந் தன்ன வென்மனார் புலவர்.' 

(செய் - 2)
 

என இச் சூத்திரத்தோடு மாட்டெறிந்து, பின்னும்
 

'எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே
குன்றலு மிகுதலு மில்லென மொழிப.' 

(செய் - 43)
 

என்றுங் கூறினார். 2இது எதிரதுபோற்றலென்னும் உத்தியுங் கூறிற்று.
 

உதாரணம் : 'வருவர்கொல்  வயங்கிழாஅய் வலிப்பன்யான் கேஎளினி'
(கலி  - 11)   என்புழி   ழகர  ஆகாரமும்  ககர  ஏகாரமும்   மாத்திரை
இறந்தொலித்தவாறு  உணர்க. 'பிடியூட்டிப்  பின்னுண்ணுங்ங்   களிறெனவு
முரைத்தனரே' (கலி - 11)  என்புழி  ஙகரவொற்று அளவிறந்தவாறு காண்க.
ஒழிந்த  மூவகைச்   செய்யுட்கும்  இவ்வாறே  தத்தமக்குரிய பாவென்னும்
உறுப்பினை நடாத்தி அளவு மிகுமாறு காண்க.
 

சிவணிய   என்பது 3தொழிற்பெயர்.  இசையொடு   சிவணிய  எனவே
செய்யுளாதல் பெற்றாம். நரம்பென்றது ஆகுபெய 


1. இறந்து - கடந்து.
 

2. இது - இச் சூத்திரம்.
 

3. தொழிற்பெயர் - வினையாலணையும் பெயர்.