ராய் யாழினை உணர்த்திற்று. மறையென்றது நூலை. மொழிபவென்றும் என்மனார் புலவரென்றும் இருகாற் கூறியவதனால், இங்ஙனம் பொருள் கூறலே ஆசிரியர்க்குக் கருத்தாயிற்று. என்னை ? செய்யுளியலுட் கூறிய 'மாத்திரையளவும்' என்னுஞ் சூத்திரத்தில் 'மேற்கிளந்தன்ன' (செய் - 2) என்னும் மாட்டேற்றிற்கு இவ்வோத்தினுள் வேறோர் சூத்திரம்இன்மையின். இவ் விலக்கணங் கூறாக்காற் செய்யுட்குப் பாவென்னும் உறுப்பு நிகழாது அவை உரைச்செய்யுட்போல நிற்றலின் இவ் விலக்கணங் கூறவே வேண்டுமென்று உணர்க. |