2. மொழிமரபு |
34. | குற்றிய லிகர நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே. |
|
என்பது சூத்திரம். மேல் எழுத்து உணர்த்திப் பின்னர் அவை தம்முட் தொடருமாறும் உணர்த்தி அவ்வெழுத்தானாம் மொழியது மரபு உணர்த்துகின்றமையின் இவ்வோத்து மொழிமரபெனக் காரணப் பெயர்த்தாயிற்று. இச் சூத்திரம் முன்னர்ச் சார்ந்து வருமென்ற மூன்றனுட் குற்றியலிகரத்திற்கு இடனும் பற்றுக்கோடுங் கூறுகின்றது. |
இதன் பொருள் : 1உரையசைச் கிளவிக்கு வரூஉம் - தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல்லிற்குப் பொருந்தவரும், ஆவயின் - அம் மியாவென்னும் இடைச்சொல்லைச் சொல்லுமிடத்து, யாவென் சினைமிசை மகரம் ஊர்ந்து - யாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியலிகரம் நிற்றல் வேண்டும் - குற்றியலிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு. |
உதாரணம் : கேண்மியா சென்மியா என வரும். கேளென்றது உரையசைக்கிளவி; அதனைச் சார்ந்து தனக்கு இயல்பின்றி நின்றது மியாவென்னும் இடைச்சொல். அவ் விடைச்சொல் முதலும் அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்புமா |
|
1. உரையசைக் கிளவி என்பதற்குத் தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்குஞ் சொல் என்றும், அது கேள் என்றும் நச்சினார்க்கினியர் கூறுகின்றார். அசைத்தல் - எதிர்முகமாக்கல். அங்ஙனமாயின் சென்மியா என்புழிச் சொல் என்பதற்கு அது பொருந்தாமல் வருகின்றது. ஆதலின் உரையசைக்கிளவி என்பதற்கு உரையசைச் செல்லாகிய மியா என்று உரையாசிரியர் கொள்ளும் பொருளே பொருத்தமாகின்றது. நன்னூலாரும் இவ்வாறே கொள்வர். உரையசை - கட்டுரைக்கண் அசைநிலையாய் வருவது. கட்டுரை - வாக்கியம். 'ஆங்க உரையசை' யென்பர் பின்னும். அச் சூத்திரத்திலே உரை என்பதற்கு நச்சினார்க்கினியர் கட்டுரை என்பர். ஆண்டு என்றது நூன்மரபை. |