புகாஅர்த்து விராஅயது என்பனவாம். 1கட்டளைகொள்ளா ஆசிரியர் இவற்றைத் தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலையென்றும் அடக்குப. இனி மொழியென்றதற்குத் தனிநிலை ஏழனையுமே கொள்ளின், ஒழிந்த இயற்சீர்ப்பாற்படும் அளபெடைகோடற்கு இடமின்மை உணர்க. |
(8) |
42. | ஐஒள வென்னு மாயீ ரெழுத்திற் கிகர வுகர மிசைநிறை வாகும். |
|
இஃது ஒத்தகுற்றெழுத்து இல்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது. |
இதுவும் எதிரது போற்றல். |
இதன் பொருள் : ஐஒள என்னும் ஆயீரெழுத்திற்கு - தமக்கு இனமில்லாத ஐகார ஒளகாரமென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கும், இகர உகரம் இசைநிறைவாகும் - ஈகார ஊகாரங்கட்கு இனமாகிய இகர உகரங்களைச் சார்த்திக்கூற, அவை அக் குன்றிசைமொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம் என்றவாறு. |
ஐஇ ஒளஉ என நிரனிறையாகக் கொள்க. இவற்றை முற்கூறிய இயற்சீரெட்டிற்கும் ஏற்பனவற்றோடு உதாரணங் காட்டிக்கொள்க. |
இத்துணையும் நூன்மரபின் ஒழிபு. |
(9) |
43. | நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. |
|
இஃது ஓரெழுத்தொருமொழி உணர்த்துதல் நுதலியவற்றுள் நெட்டெழுத்தானாம் மொழியாக்கங் கூறுகின்றது. |
இதன் பொருள் : நெட்டெழுத்து ஏழே - நெட்டெழுத்தாகிய உயிர்களேழும், ஓரெழுத்தொருமொழி - ஓரெழுத்தானாகும் ஒருமொழியாம் என்றவாறு. |
|
1. கட்டளைகொள்ளா ஆசிரியர் என்றது, கட்டளை யடிகொள்ளாத ஆசிரியர் என்றபடி. கட்டளை யடியென்றது, எழுத்தெண்ணிவகுக்குமடியை. ஒழிந்த இயற்சீர் என்றது, நேர்நேர் அல்லாத இயற்சீர்களை. அவை நிரைநேர் முதலிய ஏழு. |