மொழிமரபு81

வேண்டியவாறே   வருமென்று   உணர்க.   அன்றியுங்  குற்றொற்றென்றே
சூத்திரஞ்  செய்தலிற்  குறிலிணை  யொற்றினைக் காட்டிக் கடாவலாகாமை
உணர்க.    இது     வரையறையின்றி     உயிர்மெய்யோடு    தனிமெய்
மயங்குவனவற்றிற் சில வொற்றிற்கு வரையறை ஈண்டுக் கூறியது.
 

(16)
 

50.

குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற்
றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல.
 

இஃது  'அளபிறந்  துயிர்த்தலும்' (எழு - 33)  என்னுஞ் செய்யுளியலை
நோக்கிய     நூன்மரபிற்    சூத்திரத்திற்குப்   புறனடையாய்  அதன்கண்
நிகழ்வதோர்  ஐயம்  அகற்றுகின்றது;  என்னை?  உயிரும்  உயிர்மெய்யும்
அளபிறந்து    இசைக்குங்காற்    குறிலோ    நெடிலோ   இசைப்பதென
மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயம் அறுத்தலின்.
 

இதன் பொருள்: குறுமையும்    நெடுமையும்    -    1எழுத்துக்களது
குறியதன்மையும்    நெடியதன்மையும்,    அளவிற்     கோடலின்    -
மாத்திரையென்னும்  உறுப்பினைச்  செவி  கருவியாக  அளக்கின்ற அளவு
தொழிலாலே  செய்யுட்குக்  கொள்ளப்படுதலின், தொடர்மொழியெல்லாம் -
அம்மாத்திரை     தம்முட்டொடர்ந்து     நிற்கின்ற    சொற்களெல்லாம்,
நெட்டெழுத்தியல  -  நெட்டெழுத்து  மாத்திரை  மிக்கு நடக்கும்படியாகத்
தொடர்ந்த சொல்லாம் என்றவாறு.
 

உதாரணம்: 'வருவர்கொல்     வயங்கிழாஅய்'   (கலி 11)    எனவும்,
'கடியவேகனங்குழாஅய்'   (கலி - 11)  எனவுங்   குற்றெழுத்துக்களெல்லாம்
நெட்டெழுத்தினை    மாத்திரை   மிகுத்தற்குக்   கூடியவாறு    உணர்க.
ஏனைச்செய்யுட்களையும்    இவ்வாறே   காண்க.    எனவே,   மாத்திரை
அளக்குங்கால் நெட்டெழுத்தே


1. இதற்கு    நச்சினார்க்கினியர்    எழுத்துக்களது   குறியதன்மையும்,
நெடியதன்மையும்,  மாத்திரை  என்னும்  உறுப்பினைச்  செவி  கருவியாக
அளக்கின்ற  அளவு  தொழிலாலே  செய்யுட்குக் கொள்ளப்படுதலின், அம்
மாத்திரை  தம்முட்டொடர்ந்து நிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தை
மாத்திரை  மிகுதற்குத்   தொடர்ந்த  சொல்லாம்  என்று  பொருள்  கூறி
நெட்டெழுத்துக்களை