| “திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்தம் இசைபரந் துலகேழ்த வேதினாட் டுறைபவர்” | (கலி-பாலை-26.) |
என்றவழி, ஏதினாட்டுறைபவர் அருளுவாராக என வேண்டிக் கோடற் பொருண்மைக்கண் ஈறுதிரிந்தது. பிறவுமன்ன. (29) செய்யும் என்னும் முற்றுப் பொருந்தாத இடம் | 221. | பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை அவ்வயின் மூன்றாம் நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா. |
இதுவும் எய்தியது ஒருமருங்கு மறுத்தலை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். பலரை உணர்த்தும் படர்க்கையும், முன்னிலையும், தன்மையுமாகிய மூன்றிடமும் நிகழ்காலங் குறித்த செய்யும் என்னுங் கிளவியொடு பொருந்தா, எ - று. ஈண்டும் இவ்வாறோதி; முன்னும் 1அவ்வாறு பொருட்கும் ஓரன்ன உரிமைய--செய்யும் செய்த என்னுஞ்சொல்லே எனவும் ஓதினமையாற் செய்யும் என்பது முற்றும் பெயரெச்சமும் என இருவகைப் படுமென்று கொள்க. அது முற்றாயுழித் தன்மையினும், முன்னிலையினும் உயர்திணைப் படர்க்கைப் பன்மையினும் வாராது, ஏனைப்பாலின்கண்ணே வரும் என்றவாறாம். அவனுண்ணும்; அவளுண்ணும், அது உண்ணும், அவையுண்ணும் என வரும். ஈண்டு நிகழ் காலங் குறித்த தென்னை; எதிர்காலங் குறித்து வாராதோ எனின், எதிர்காலத்துக்கண் வருவது காலமயக்கமாகக் கொள்க. முற்றுச் சொல் சேரக் கூறுகின்றாராகலின் இச்சூத்திரம் ஈண்டோதப்பட்டது. (30) வினையெச்ச வாய்பாடுகள் | 222. | செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி. |
வினையெச்சம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். செய்து என்பது முதலாகச் செயற்கு என்பதீறாக ஓதப்பட்ட ஒன்பது வாய்பாடும் வினையெச்சச் சொல்லாம், எ - று. வினையெச்சமாவது மற்றொரு வினைச்சொல்லோடல்லது முற்றுப் பெறாது நிற்கும். வினைச்சொல்லாவது பாலுணர்த்தாது காலங் காட்டி நிற்கும். செய்து என்பது இறந்த காலங் காட்டும். செய்யூ என்பது இறந்தகாலமும் நிகழ்காலமும்
1. வினையியல்--37.
|