இ - ள். ஏ என்னும் சொல் பெற்றுதல் என்னும் பொருள்படும், எ - று. எ - டு. ‘ஏக லடுக்கம்’. (நற்றிணை-116.) பெற்றுதல் என்பது இக்காலம் பற்றுதல் எனவரும். (9) உகப்பு என்பதன் பொருள் இ - ள். உகப்பு என்னும் சொல் உயர்தல் என்னும் பொருள்படும், எ - று. எ - டு. ‘விசும்புகந் தாடாது’. (10) உவப்பு என்பதன் பொருள் இ - ள். உவப்பு என்னும் சொல் உவகை என்னும் பொருள்படும். எ - று. எ - டு. ‘உவந்துவந் தார்வ நெஞ்சமொடு’. (அகம்-35) (11) பயப்பு என்பதன் பொருள் இ - ள். பயப்பு என்னும் சொல் பயன் என்னும் பொருள்படும், எ - று. எ - டு. ‘பயவாக், களரனையர் கல்லா தவர்’. (குறள்-406.) (12) பசப்பு என்பதன் பொருள் இ - ள். பசப்பு என்னும் சொல் நிறத்தை உணர்த்தும், எ - று. எ - டு. ‘மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே’. (கலி-7) (13) இயைபு என்பதன் பொருள் இ - ள். இயைபு என்னும் சொல் புணர்தல் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘இயைந் தொழுகும்’. (14)
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒன்றாகக் கொள்வர் ஏனையுரையாளர்கள்.
|