இசைப்பு என்பதன் பொருள் இ - ள். இசைப்பு என்னும் சொல் இசைத்தல் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘யாழிசையூப் புக்கு’. ‘இசைத்தலு முரிய,’ ‘வாயிலிசை’ என ஒலிப்பொருட்கண் வந்தன. (15) அலமரல், தெருமரல் என்பனவற்றின் பொருள் | 308. | அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. |
இ - ள். அலமரல் என்னும் சொல்லும், தெருமரல் என்னும் சொல்லும் சுழலல் என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘அலமர லாயம்’ (ஐங்-64); ‘தெருமர லுள்ளமோ டன்னை துஞ்சாள்.’ (16) மழ, குழ என்பனவற்றின் பொருள் | 309. | மழவும் குழவும் இளமைப் பொருள். |
இ - ள். மழ என்னும் சொல்லும், குழ என்னும் சொல்லும் இளமை என்பதன் பொருள்படும், எ - று. எ - டு. ‘மழகளிறு’. (புறம்-38); ‘குழக்கன்று’ (நாலடி-101) (17) சீர்த்தி என்பதன் பொருள் இ - ள். சீர்த்தி என்னும் சொல் மிகுபுகழ் என்பதன் பொருள்படும். எ - று. எ - டு. ‘வயக்கஞ் சால் சீர்த்தி.’ (18) மாலை என்பதன் பொருள் இ - ள். மாலை என்னும் சொல் இயல்பு என்னும் பொருள்படும். எ - று. எ - டு. ‘குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்’ (கலி-9.) (19)
1. இதனையும் அடுத்த நூற்பாவினையும் ஒன்றாகக் கொள்வர் நச்சினார்க்கினியர்.
|