170தொல்காப்பியம்[உரியியல்]

170

எ - டு. ‘தடமருப்பெருமை’ (நற்-120); ‘கயந்தலைக்குழவி’; ‘நளியிருள்’.

(27)

பழுது என்பதன் பொருள்

320.பழுது பயனின்றே.

இ - ள். பழுது என்னும் சொல் பயனின்மை உணர்த்தும், எ - று.

எ - டு. “பழுது கழிவாழ் நாள்”.

(28)

சாயல் என்பதன் பொருள்

321.சாயல் மென்மை.

இ - ள். சாயல் என்னும் சொல் மென்மை என்பதன் பொருள்படும், எ - று.

எ - டு. ‘சாயன் மார்பு’.

(29)

முழுது என்பதன் பொருள்

322.முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே.

இ - ள். முழுது என்னும் சொல் ஒழியாமையை உணர்த்தும், எ - று.

எ - டு. ‘உலகமுழு தாண்ட’. (சிலப்-அந்தி-1.)

(30)

வம்பு என்பதன் பொருள்

323.வம்புநிலை யின்மை.

இ - ள். வம்பு என்னும் சொல் நிலையின்மையை உணர்த்தும், எ - று.

எ - டு. ‘வம்ப மாரி’ (குறுந்-66).

(31)

மாதர் என்பதன் பொருள்

324.மாதர் காதல்.

இ - ள். மாதர் என்னும் சொல் காதல் என்னும் பொருள் படும், எ - று.

எ - டு. ‘மாதர் நோக்கு’.

(32)

நம்பு, மேவு என்பவற்றின் பொருள்

325.நம்பும் மேவும் நசையா கும்மே.

இ - ள். நம்பு என்னும் சொல்லும், மேவு என்னும் சொல்லும் நசை என்பதன் பொருள்படும், எ - று.