எ - டு. ‘நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி’ (அகம்-198) ‘பேரிசை நவிர மேஎ யுறையும்.’ (மலைபடு-82) (33) ஓய்தல் ஆய்தல், நிழத்தல், சாஅய் என்பவற்றின் பொருள் | 326. | ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். |
இ - ள். ஓய்தல் என்னும் சொல்லும், ஆய்தல் என்னும் சொல்லும், நிழத்தல் என்னும் சொல்லும், சாஅய் என்னும் சொல்லும் ஆகிய அந்நான்கு சொல்லும் ஒரு பொருட்குள்ள அளவின் நுணுக்கத்தைக் காட்டும், எ - று. எ - டு. ‘வேனி லுழந்த வறிதுயங் கோய்களிறு’ (கலி.7); ‘பாய்ந்தாய்ந்த தானைப் பரிந்தானா மைந்தினை’ (கலி-96); ‘நிழத்த யானை மேய் புலம்படர’ (மது-303); ‘கயலற லெதிரக் கடும்புனற் சாஅய்’ (நெடுநல்-18). (34) புலம்பு என்பதன் பொருள் இ - ள். புலம்பு என்னும் சொல் தனிமை என்னும் பொருள்படும், எ - று. எ - டு.‘புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி’. (அகம்-7) (35) துவன்று என்பதன் பொருள் இ - ள். துவன்று என்பது நிறைவு என்பதன் பொருள்படும். எ - று. எ - டு. “ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்” (நற்-170.) (36) முரஞ்சல் என்பதன் பொருள் இ - ள். முரஞ்சல் என்னுஞ் சொல் முதிர்வு என்னும் பொருள்படும், எ - று. எ - டு. “கோடுபல முரஞ்சிய கோளி யாலம்”. (மலைபடு-268) (37) வெம்மை என்பதன் பொருள் இ - ள். வெம்மை என்னும் சொல் வேண்டல் என்பதன் பொருள்படும், எ - று.
|