ஒருசார் குறிப்பெச்சம் | 437. | 1ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும் இரவின் கிளவி 2ஆகிடன் உடைய அவற்றுள், ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே தாவென் கிளவி ஒப்போன் கூற்றே கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே. |
இதுவும் ஒருசார் குறிப்பெச்சம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஈ, தா, கொடு என்னுஞ் சொற்கள் ஒரு பறவையின் பெயரும், தொழிற் பொருண்மையும், கொடுமையும் ஆதலன்றி, இரப்போன் கூற்றாதலும் உரிய. அவற்றுள், ஈ என்பது இழிந்தோன் கூற்று என்பதூஉம், தா என்பது ஒப்போன் கூற்று என்பதூஉம், கொடு என்பது உயர்ந்தோன் கூற்று என்பதூஉம் உணர்த்தும், எ - று. இச் சொற்கள்தம்மானே இழிந்தான், ஒப்பான், மிக்கான் என்னும் பொருண்மை, எஞ்சிநிற்றலிற் குறிப்பெச்சமாயிற்று. மேலதற்கோர் வழுவமைதி | 438. | கொடுவென் கிளவி படர்க்கை யாயினும் தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பிற் றன்னிடத் தியலும் என்மனார் புலவர். |
மேலதற்கோர் வழுவமைதி உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள், கொடு என்னுஞ் சொல் படர்க்கையாயினும், தன்னைப் பிறன்போற் கூறுங் குறிப்பினாற் றன்னிடத்தியலும் என்று சொல்லுவர் புலவர், எ - று. தன்னைப் பிறன்போற் கூறுதலின் குறிப்பெச்சமாயிற்று. இச்சூத்திரத்தானும் குறிப்பெச்சம் அதிகாரப்பட்டவாறு கண்டுகொள்க. (46) இசையெச்சம் | 439. | 3பெயர்நிலைக் கிளவியின் ஆஅ குநவும் திசைநிலைக் கிளவியின் ஆஅ குநவும் |
1. இவற்றை நான்கு சூத்திரங்களாகக் கொள்வர் ஏனை உரையாசிரியர்கள். 2. ‘ஆகிடனுடைத்தே’ என்பது இளம்பூரணர் பாடம். 3. ‘சினைநிலைக் கிளவியின் ஆஅ குநவும்’ என்பது இளம்பூரணர் கொண்ட பாடம்.
|