எ-டு:மா பூத்தது. வினையான் மரமென்பது புலப்பட்டது மாவும் மருதும் ஓங்கின. இனத்தான் மரபென்பது புலப்பட்டது. வேனில் பிறந்தது இனி மாவிற்குக் காவல் வேண்டும் என்புழிச் சார்பால் மரம் என்பது புலப்பட்டது. அக்காலத்து அது பயன் தருமாகலின். மா பாய்ந்தது (விலங்கு- வினை) மாவும் யானையும் தேரும். (இனம்) கவசம் பூண்டு வந்தான் மாவைக் கொணர்க என்புழிச் சார்பு. இனமாவது இயற்கையானும் செயற்கையானும் ஒரு குழுவாய் அமைதற்கு இயைபுடைய பொருள். சார்பாவது நிகழ்ச்சியானும் சூழலானும் ஒருவாற்றான் இயைபுடைய பொருள். |
இனி ஒன்றென முடித்தலான் பாற்பொதுவாக நிற்கும் அஃறிணை இயற்பெயர்களும் உயர்திணைப் பன்மைப் பெயர்களும் வேறுபடுவினை முதலியவற்றான் ஒருபாலை வரைந்து சுட்டுதல் கொள்க. |
எ-டு :இப்பெற்றம் உழுதது (ஆண்) இப்பெற்றம் கறக்கும் (பெண்). இவ்யானை மதங்கொண்டது (ஆண்) இவ்யானை வயாவுற்றது (பெண்) இம்மக்கள் வேட்டையாடினர் (ஆண்) இம்மக்கள் கிள்ளை ஓப்பினர் (பெண்) என வரும். |
| சூ. 54 : | ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும் |
| வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல் |
| நினையுங் காலைக் கிளந்தாங் கியலும் |
[54] |
| க-து: | வினைவேறுபடாப் பலபொருளொருசொல் பொருளுணர்த்துமாறு கூறுகின்றது. |
| |
உரை :ஒன்றுபடும் வினைப்பகுதியான் பலவற்றொடும் பொருந்தி வரும் வினையான் வேறுபடாத பலபொருளொருசொல் ஆராயுங்கால் இதுவாவது இது என்று ஆங்குக் கிளக்கப்பட்டு வரும். |
"ஒன்று வினை மருங்கின் ஒன்றித் தோன்றும்" என்பது வினை வேறுபடாப் பலபொருளொரு சொற்கு அடையாய் அதனை விளக்கி நின்றது. இதனைத் தனிச் சூத்திரமாகக் கொள்ளின் அஃது மாறுபடக்கூறலாய் முடியுமென்க. ஒன்றுவினை = பொதுவினை. அவையாவன: வளர்ந்தது, வீழ்ந்தது, இனிது, பெரிது என்றாற்போல வருவன. கிளந்து கூறலாவது இன்னது என எடுத்து விளங்கக்கூறல். |
எ-டு :மரமா வளர்ந்தது, பரிமா வளர்ந்தது, முல்லைக்கொடி அசைந்தது, மீன்கொடி அசைந்தது எனவரும். இனிப் பறவாக் |