80கிளவியாக்கம்

அஃறிணையிடத்தவாய்க் கிளக்கப் பெற்று   அஃறிணையாக   நடைபெறும்.
என்றது : குடிமை முதலாயவை   பொருளான்   உயர்திணைப்   பாங்கின
எனினும் சொல்முடிபான் அஃறிணையாயே நிகழும் என்றவாறு.
 

இவற்றுள் குடிமை, விருந்து, அரசு,   தன்மைதிரிபெயர்,   செறற்சொல்,
விறற்சொல்   ஆகியவை   உயர்திணைப்   பொருட்குரிய   பண்பாகலின்
"உயர்திணை மருங்கின் நிலையின வாயினும்" என்றார்.
 

ஆண்மை, இளமை, மூப்பு, வன்மை, குழு,  பெண்மை,   மக,   குழவி,
உறுப்பின்  கிளவி,   காதல்,   சிறப்பு   ஆகியவை   இரு   திணைக்கும்
பொதுவாயினும் சொல்லுவோன்  குறிப்பினான்,   உயர்திணை   மருங்கின்
நிலை    பெறுமாயின்   அவற்றை   உயர்திணைப்   பண்பாக   அறிதல்
வேண்டுமென்பார் "முன்னத்தின் உணரும் கிளவி" என்றார்.
 

குடிமையாவது சால்பு, இதனை மடிமை குடிமைக்கட் டங்கின்  (குற-608)
என்பதனான் அறிக. ஆண்மையாவது ஆளுந்தன்மை.  இதனைப்  பிறப்பே
குடிமை ஆண்மை ஆண்டொடு (மெய்-22)  என்பதனான்  அறிக.  இளமை
இளையாரையும்,  முதுமை    முதியாரையும்   கருதிவருதலை  இளமைக்கு
உலகியல் தெரியாது. மூப்பில்லா அவையில்   முறையிட்டுப்    பயனில்லை
எனவரும் வழக்கியலானறிக.
 

அடிமை என்பது, அடிமைக்கு   அரசாளும்    உரிமையில்லை    என
வழங்குதலானறிக. இவ்வன்மைக்கு எதிர்நிற்பார்  யார்?    என    வழங்கு
தலானறிக. விருந்து என்பதும்   உயர்திணைப்   பண்பேயாம்.    அதனை
விருந்தெதிர் கோடலும்    இழந்த    என்னை (சிலம்பு 2-6-73) ' விருந்து
புறத்ததாத் தானுண்டல்' (குறள்-82) என்பவற்றானறிக.
 

குழுவென்பது     குழுவினரை     உணர்த்தலை   ஐம்பெருங்குழுவும்
எண்பேராயமும் என்பவற்றான் அறிக. பெண்மையாவது சாயல் (பெண்மைத்
தன்மை) அஃது   அதனை   உடையாளைக் கருதி வருதலை  "மடலேறாப்
பெண்ணிற்   பெருந்தக்க  தில்" (குற-1137) என்பதனானறிக. அரசு என்பது
அரசனை உணர்த்துவதை "மறனிழுக்கா  மான   முடைய தரசு"  (குற-384)
என்பதனானறிக. மகவு குழவி என்பவை உயர்திணைக்காதலைக்  "குழவியும்
மகவும் ஆயிரண் டல்லவை கிழவ வல்ல  மக்கட்    கண்ணே"  (மரபி-23)
என்பதனானறிக. தன்மைதிரிபெயர் என்றது  ஆண்   தன்மையும்   பெண்
தன்மையும் இல்லாத அலி. பொருளைப் பெயர்   என்றார்,  முடிவு  அதன்
கண்ணதாகலின் உறுப்பின்கிளவி என்பது உறுப்பினைப் பற்றிய  பண்பினை
"ஊமை வந்தது, செவிடு வந்தது'