திரிந்தாகியதும் என ஐந்துவகைப் படுமாறும். பிறிதின் கிழமை : பொருட்கிழமையும் நிலக்கிழமையும், காலக்கிழமையும் என மூன்றுவகைப்படுமாறும் பிறவும் வருஞ் சூத்திரத்தான் விரித்துக் கூறப்படும். எடுத்துக் காட்டுக்கள் ஆண்டுக் காட்டப்பெறும். |
'து' என்னும் கிழமைப் பொருள்தரும் குறிப்புரிச்சொல் ஒலிநயங்கருதி அகரத்தொடு சேர்ந்து உருபிடைச் சொல்லாய் நின்றது என அறிக. 'து' என்பது உடைமைப் பொருள்தருதல் பற்றியே அதனைக் குறிப்பு வினைக்கண் இறுதி இடைச்சொல்லாக நூலோர் அமைத்துக் கொண்டனர் என்க. |
சூ. 80 : | இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின் |
| செயற்கையின் முதுமையின் வினையின் என்றா |
| கருவியின் துணையின் கலத்தின் முதலின் |
| ஒருவழி யுறுப்பின் குழுவின் என்றா |
| தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் |
| திரிந்து வேறுபடூஉம் பிறவும் அன்ன |
| கூறிய மருங்கின் தோன்றுங் கிளவி |
| ஆறன் பால என்மனார் புலவர் |
[19] |
க-து : | மேற்கூறிய தற்கிழமை பிறிதின் கிழமைப் பொருள்கள் வகைப்படுமாறு விரித்துக் கூறுகின்றது. |
|
உரை :இயற்கை முதல் வாழ்ச்சி ஈறாக வருவனவும் திரிந்து வேறுபட்டு வருவனவும் அவை போல்வன பிறவுமாய் மேற்கூறப்பட்ட இலக்கணத்தான் தோன்றிவரும் பொருள்களும் ஆறாம் வேற்றுமைப்பாலான எனக்கூறுவர் ஆசிரியர். |
திரிந்து வேறுபடுதலாவது; கோட்டது நூறு (கோடு = சங்கு; நூறு = துகள்) என்புழிக் கோடே துகளாக மாறி நிற்றலாம். இங்ஙனம் வடிவு வேறுபடாமல் சாத்தனது செலவு என வினை முதலின் வேறுபாடாகவரின் மெய்திரிந்தாய தற்கிழமை எனப்படும். மெய் திரிதல்-வடிவின்றிச் செயலும் பண்புமாக நிற்றல். |
எ-டு :இயற்கை : இயல்பாகப் பெற்றிருக்கும் தன்மை. அது, சாத்தனது இயல்பு - நிலத்தது வலிமை - நங்கையது நலம் எனவரும். நலம் செய்துகொள்ளப்பட்டதாயின் செயற்கை என்பதன்கண் அடங்கும். இஃது ஒன்றியற்கிழமையாகிய தற்கிழமை. |
உடைமை : பிறர்க்கும் பொதுவான ஒன்றினைப் பொருள் முதலியவற்றான் தனக்குரிமையாகக் கொண்டிருத்தல் அது. |