வேற்றுமையியல்123

அன்னபிற   என்றதனான் :  சொல்லது  பொருள் - சாத்தனது ஒப்பம்
(கைச்சாத்து)   அழகினது   பொலிவு.   சாத்தனது  ஒப்பு (ஒப்பு - படிவம்)
என்றாற்   போல்வன     கொள்க.    பிறவும்    கிழமைப் பொருட்டாய்
வருவனவற்றை ஓர்ந்து கொள்க.
 

சூ. 81 :

ஏழா குவதே
கண்எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பிற் றோன்றும் அதுவே 
 

(20)
 
க-து :

ஏழாம் வேற்றுமை ஆமாறு கூறுகின்றது.
 

உரை :கண்     எனப்    பெயர்   பெற்ற   வேற்றுமைச்    சொல்
யாதொருபெயரிடத்து வரினும் அஃது ஏழாம் வேற்றுமையாம். அது  வினை
நிகழிடமும்,  நிலமும்,  காலமும்  என்னும் அவ்வகையான இடப்பொருளின்
கண் தோன்றும்.
 

பகற்குறி   இரவுக்குறி   என்றாற்போலக்  குறிப்பென்பது குறிக்கப்படும்
இடத்தை உணர்த்தி நின்றது. நிலமொழிந்த இரண்டும்   இடமாகக் குறித்துக்
கொள்ளப்படும்    என்பதறிவித்தற்காக   இடம்   என்னாது 'குறிப்பு' என
ஓதினார். எனவே, பெயர்ப்பொருளை இடமாக வேற்றுமை  செய்தல் ஏழாம்
வேற்றுமை என்பது பெறப்படும்.
 

வினைசெய்    இடம்    என்றது    புடைபெயர்ச்சியாகிய    தொழில்
நிகழாநிற்கும்   நிகழ்ச்சியாகிய    இடம். அது   மழை பெய்தற்கண் காற்று
வீசிற்று--புல்லுதற்கண் வியர்வை தோன்றிற்று-ஊடலின்கண் புலவி நேர்ந்தது
எனவரும்.   நிலம் என்றது ; காலந்தவிர்ந்த  ஏனைய  காட்சிப் பொருளும்
கருத்துப்  பொருளுமாம். அது நிலத்தின்கண் பயிர்  விளைந்தது, மலையின்
கண் பனி படர்ந்தது, கடலின்கண் நாவாய் சென்றது, விண்ணின்கண் பருந்து
பறந்தது    எனவும்,  அறிவின்கண்  உணர்வு  தோன்றிற்று, உவப்பின்கண்
தோன்றியது வாழ்த்து எனவும்வரும். காலம் என்றது : நொடி முதலாக ஊழி
ஈறாக  வரும் சிறுபொழுது பெரும் பொழுதுகளும்  அவைகுறித்தபெயர்களு
மாம். அது,  ஒரு   நொடிக்கண்   வருவான். காலைக்கண் கதிர் எழுந்தது.
தையின்கண் பிறந்தான்.    ஆதிரைக்கண்   தோன்றினான். வேனிலின்கண்
பூத்ததுமா - ஆண்டின்கண்   நிகழ்ந்தது  சிறப்பு.  ஊழிக்கண் தோன்றியது
வெள்ளம் எனவரும்.