சூ. 45:இனமானவற்றையே எண்ணுதல் வேண்டும்  என்னும் விதியின்று
என்கின்றார்.  எண்  என்றா  உறழென்றா  ஆயிரண்டும்  இனன்  ஒன்றல்
வேண்டும்  என்ற  விதியினைச்  சான்றோர்  பின்பற்றுதல்   வெளிப்படை.
இவ்வுரையாளர்  காட்டியுள்ள எடுத்துக்காட்டும்  இனமாயவற்றை எண்ணிய
எடுத்துக்காட்டே.13
 

சூ. 50:தொடி சிலம்பு  மகளிர்க்குரியன. தோள்வளை ஆடவர்க்குரியது.
இஃதவர் ஏந்தியவாள். அஃது அவர் படைத்தடுத்த கிடுகு. இவர் துணங்கை
யாடினார்-ஆடவரைச் சுட்டி நின்றது என்கின்றார்.
 

குறுந்தொடி  கழிந்தகை சாபம் பற்றிக், கழல் தொடித் தடக்கை கலிமான்
நள்ளி திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்-எனத்தொடியும் சிலம்பும்
ஆடவர்  அணிந்தவை.  தூமணித் தோள்வளை தோளுக்  கணிந்து-மாதவி
அணிந்தது.  பேய்  மகள்  நிணந்தின் வாயள்  துணங்கை  தூங்க-கேடகம்
வாளொடு ஏந்தி......மாடத்து உச்சி  நின்ற மலைமகள் என இவை மகளிர்க்கு
வந்துள்ளன.    எனவே    இந்த    எடுத்துக்காட்டுக்களின்   பொருத்தம்
ஆராய்தற்குரியது.14
 

சூ. 53:வேறுபடுதல்    தன்வினை-வேறுபடூஉதல்     பிற    வினை.
எழுதல்-எழூஉதல் போல. வேறுபடுத்தற்குரிய வினையை வேறுபடூஉ வினை
என்று குறிப்பிடலாம் என்று தோன்றுகின்றது (பக்-76)
 

சூ. 55:"குறித்தோன்      கூற்றம்"      இந்நூற்பாவின்     கருத்து
'வினைவேறுபடூஉம்' என்றவினை 'வினைவேறுபடாஅ' என்ற நூற்பாக்களில்
அடங்கியிருத்தலின்   இதற்குத்   தெய்வச்சிலையார்   உரைக்கும்   உரை
பொருத்தமாகத் தோன்றுகிறது.15
 

சூ. 56:காதலுக்குரிய   எடுத்துக்காட்டுக்கள்   மயக்கந்   தருவனவாக
உள்ளன. 'பாவை-யானை' ஒப்புமை கருதாது 


13. இனமே என்னும்  யாப்புறவு  இல்லை.  இமைல்லாதனவும் எண்ணப்
படலாம் என்பதே கருத்து.
 

14. தெய்வத்திற்கும்-தெய்வமொப்பக்   கருதப்படும்  அரசர்க்கும்  விதி
விலக்குண்டு. பெரும்பான்மை உலக வழக்குப்பற்றி இவ் எடுத்துக்காட்டுக்கள்
தரப்பெற்றன.
 

15. இந்நூற்பா   மரபியலுட்   கூறும்   மரபுப்பெயர்களை  நோக்கியது
என்பது எனது கருத்து.