மென்பார் நிலைவினை என்றார். முதல் சினை என்பவை நியதியின்றித் தடுமாறும் இயல்பினவாதலின் ஒன்றன்பாற் படுதலை நிலை என்றார். இஃது உருபும் பொருளும் உடன் மயங்கின மயக்கம். இஃது நிலை மொழி பற்றிய வரையறையாகலின் வேறு கூறினார். |
சூ. 86 : | கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே |
[3] |
க-து : | இரண்டாவதனொடும் ஏழாவதனொடும் வருமொழித் தொழிற்சொல் மயங்குமாறு கூறுகின்றது. |
| |
உரை :கன்றலும் செலவும் ஆகிய தொழிற் சொற்கள் மேற்கூறிய இரண்டு வேற்றுமைக் கண்ணும் ஒத்த வரவினவாம். |
எ-டு :சூதினைக் கன்றினான் - சூதின்கட் கன்றினான் எனவும், நெறியைச் சென்றான் - நெறிக்கட் சென்றான் எனவும் வரும். கன்றுதல் - இவறுதல். சார்பென் கிளவி போலன்றி இவை இரண்டு வேற்றுமைக்கண்ணும் ஒத்த வரவின ஆதலின் 'சார்பென் கிளவிக்கு' என்பதன் பின்வையாது இதனை ஈண்டு வைத்தார். |
| சூ. 87 : | முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை |
| முதற்கண் வரினே சினைக்கு ஐவருமே |
[4] |
க-து : | ஒரு தொடரின்கண் முதலும் சினையும் ஒருங்கு வருதற்கண் எய்தும் வேற்றுமை மயக்கம் ஆமாறு கூறுகின்றது. |
| |
உரை: முதலும் சினையும் ஒருங்குவரும் தொடரின்கண் ஆறாம் உருபு முதற்பொருள் இடத்துவரின் சினைக் கிளவியினிடத்து இரண்டாம் உருபு வரும். |
எ-டு :யானையது கோட்டைக் குறைத்தான், மரத்தினது கிளையை முரித்தான் எனவரும். |
| சூ. 88 : | முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை |
| சினைமுன் வருதல் தெள்ளி தென்ப |
[5] |
க-து : | இதுவுமது. |
| |
உரை : மேற்கூறிய முதற்சினைகிளவிகள் அங்ஙனம் ஒருங்கு வருமிடத்து முதற்கிளவிக்கண் இரண்டாம் உருபு வரின் சினைக் கிளவிக்கண் ஏழாவதன் உருபு வருதல் தெளிவுடையதாகும் என்று கூறுவர் ஆசிரியர். |