வேற்றுமை மயங்கியல்133

எ-டு :யானையைக்    கோட்டின்கண்   குறைத்தான்,    மரத்தினைக்
கிளையின்கண்    வெட்டினான்   எனவரும்.  செயப்படு  பொருள் ஆதல்
கருதியும்   இடமாதல்   கருதியும் யானையைக்  கோட்டைக்  குறைத்தான்
எனவும் யானையின்கண்  கோட்டைக்    குறைத்தான்   எனவும்  வருதல்
தெள்ளிது அன்றென்றவாறாம்.
 

சினைநிலைக்   கிளவிக்கு   ஐயும்  கண்ணும் ஒத்த வரவின என மேற்
கூறப்பட்டமையான் முதலொடு கூடி   ஒருங்கு   வருங்கால் முதற்பொருள்
ஏற்கும்   உருபிற்கேற்பச்   சினைக்கிளவி  ஒன்றனை மட்டுமே ஏற்றுவரும்
என இவ்விரு   சூத்திரங்களானும்   வரையறை   செய்தார். இவற்றை ஒரு
சூத்திரமாகக்    கூறினும்    இழுக்காதென்க.  இவை  இரண்டும் பொருள்
மயக்கங்கூறினவாம்.
 

சூ.89: 

முதலும் சினையும் பொருள்வேறு படாஅ 

நினையுங் காலைச் சொற்குறிப் பினவே  

(6)
 

க-து :
 

முதற்பொருள்    சினைப்பொருட்கண்     உருபுகள்    தடுமாறி
வருவதற்குக் காரணம் கூறும் முகத்தான் முதலும் சினையும் பற்றிய தொரு மரபு கூறுகின்றது.
 

உரை :முதல்   என்பதும்  சினை என்பதும் பொருளான் வேறு வேறு ஆகா. ஆராயுமிடத்து     அவை      வேறு   வேறாகச்  சொல்லப்படும் குறிப்பினவாம்.
 

அஃதாவது   அரசனது    யானையைக்   குத்தினான் என்புழி அரசன்
குத்தப்படவில்லை என்பது புலனாகும். காரணம் பொருள்  இரண்டும் வேறு
வேறு     ஆதலின்.   யானையது   துதிக்கையை   வெட்டினான் என்புழி
வெட்டுப்பட்டது   யானையே.  யானையும்   துதிக்கையும்   வேறுவேறல்ல
ஆதலின். அரசனைத்  தேரின்கண் வெட்டினான் என்பதையும் யானையைக்
கோட்டின்கண்   குறைத்தான்    என்பதையும்   அவ்வாறே  அறிகிறோம்.
யானையது கோடு என்னுமிடத்து யானையின் ஒரு பகுதியைச் சினையாகவும்
ஏனையவற்றை முதலாகவும் கருதுகின்றோம். யானையது துதிக்கை என்றவழி
முன்னர்   முதற்பகுதியாக   நின்ற   துதிக்கைச்  சினையாகவும் சினையாக
நின்ற   கோடு   முதற்பகுதியாகவும்   மாறி விடுகின்றது, ஆதலின், சுட்டி
எடுத்துக்    கொண்ட    பொருளை முதலாகவும்    அதன்  பகுதிகளைச்
சினையாகவும் கருதுகின்றோம்.  மேலும்   யானை  என்னும் ஒருபொருளை
முதலாகக் கருதுங்கால்  அதன் பகுதிகளாகிய தலை உடல்  கால் துதிக்கை
ஆகியவற்றைச்   சினையாகவும்,  துதிக்கையை    முதலாகக்  கருதுங்கால்
அதன்,   பகுதியாகிய     இடை,    கடை,   நுனி, பக்கம், துளை, புள்ளி
ஆகியவற்றைச் சினையாகவும் கூறுகின்றோம்.