248வினையியல்

அவ்வயின்  என்றது   எஞ்சிய  கிளவிகட்கு ஓதிய   இடமும்  பாலுமாகிய
பொருட்கண்   என்றவாறு.  நிகழுங்காலத்துச்   செய்யுமென்  கிளவி  என
அதன்  காலமுணர்த்தும்  இயல்பு  கூறியவாறு. அதனான்  செய்யுமென்னும்
எச்சம் எதிர் காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் உரித்தாதல் பெறப்படும்.
 

எ-டு :அவன்  உண்ணும்,  அவள்   உண்ணும்,   அது   உண்ணும்,
அவையுண்ணும் எனவரும்.
 

சூ. 229 :

செய்து செய்யூச் செய்பு செய்தெனச்

செய்யியர் செய்யிய செயின் செய செயற்கென

அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி

[31]
 

-து:

நிறுத்த முறையானே வினையெஞ்சு கிளவியின் இலக்கண மாமாறு
கூறத்   தொடங்கிக்   காலத்தானும்   பொருள்    நிலையானும்
வேறுபட்டு வரும் அதன்  இயல்பினை வாய்பாட்டான்  வகுத்துக்
கூறுகின்றது.
 

உரை : செய்து   முதலாய    ஒன்பது   வாய்பாட்டுச்     சொல்லும்
வினையெச்சச் சொற்களாம்.
 

இறுதிநிலையான்  வேறுபடுதலின்  அவ்வகை ஒன்பது என்றார். செய்யூ
என்பது செய்யா எனவும் வரும். இதனைச் "செய்யா என்னும் வினையெஞ்சு
கிளவியும்"  (உயிர்மய-20)  என்பதனான்  அறியலாம். ஒருசாரார்  செய்யா
என்பதனைத்  தனியொரு  வாய்பாடாகக்  கருதினர்.  அது   பொருந்தாது
என்பதனை 'நிகழூஉ நின்ற பலர்வரை கிளவியின்' (பெயர்-19) என்பதனான்
அறியலாம்.
 

இவற்றிற்குரிய கால எழுத்துக்களை மேலே முற்றுவினைக்குக் கூறியாங்கு
அவ்வவற்றிக்கு ஏற்ப அறிந்து அமைத்துக் கொள்க.
 

வரலாறு : செய்தென்பது இறந்தகாலம் பற்றிப்  பயின்று வரும்.  எ-டு :
ஒத்துநின்றான்  உண்டுவந்தான்  கற்றுவந்தான்  - இவை  தடற   என்னும்
ஒற்றுக்களான் இறந்தகாலங்காட்டித்  திரியாது  வந்தன. உரிஞ்சி  நின்றான்,
ஓடி வந்தான், கூய்ச் சென்றான், போய் நின்றான் என இவை ஈறுவேறுபட்டு
வந்தன.  இத்திரிபுகளை உகரத்தின்  திரிபென்பார்  சேனாவரையார்.  அது
பொருந்தாது என்பதை நச்சினார்க்கினியர் மறுப்புரையானறியலாம்.
 

செய்து   என்னும்  வாய்ப்பாட்டுள்  காலம்  காட்டும்   உறுப்புத் தகர
மெய்யாகும். இகரமும் அதன் திரிபாகிய யகரப்புள்ளியும்