250வினையியல்

எனவரும்.   இவ்வாய்பாடு   சிறுபான்மை, "நனவிற்  புணர்ச்சி நடக்கலும்",
(கலி-39) "அற்றால் அளவறிந்துண்க" என வேறுபட்டும் வரும்.
 

செய : என்பது காரணப் பொருட்டாய்  இறந்தகாலம்  பற்றியும் காரியப்
பொருட்டாய் எதிர்காலம்  பற்றியும்,   இது   நிகழா  நிற்ப இது நிகழ்ந்தது
என்பதுபட  நிகழ்காலம்  பற்றியும் வரும். மழை பெய்யக் குளம் நிறைந்தது.
உண்ண வந்தான், ஞாயிறுபட வந்தான் என முறையே கண்டு கொள்க.
 

இனிக்   காரணப்பொருட்டாய்   இறந்த   காலம்  பற்றியும்   காரியப்
பொருட்டாய் எதிர்காலம் பற்றியும் இது நிகழாநிற்ப இது நிகழ்ந்தது என்பது
பட    நிகழ்காலமுணர்த்தியும்   வரும்   'செய'   என்னும்   வாய்பாட்டு
வினையெச்சத்தை  ஈறு  கெட்டு நிற்கும் தொழிற் பெயரெனவும் செயவென்
எச்சம் வியங்கோட்   பொருளிலும்   வருமெனவும்   ஒருசாரார்  மயங்கிக்
கூறுவர். அவன் என்னைக்   காணவிரும்பினான்,  யான் அவனைக்  காண
விரும்பினேன் எனவருவனவற்றுள் காண என்பது காணல் என்னும் தொழிற்
பெயர்   எனக் கூறுவர்   அவர்.   காணல் என்பது காலத்தொடு புணராது
நிற்றலின்  அதனை   வினையெச்சம்   எனக்கருதுதல் திரிபுணர்ச்சியாகும்.
அதனைக்     காண்பான்    விரும்பினான்    என   விரித்தலே   நூல்
நெறிக்கொத்ததாகும்.  காணல்  விரும்பினான்  எனப்பொருள்  கொள்ளின்
ஐயுருபு  தொக்க   செயப்படுபொருட்  சொல்லாகக்  கோடல்   வேண்டும்
வினைகொண்டு   முடிதல்   ஒன்றையே  கருதி அங்ஙனம் வருவனவற்றை
வினையெச்சமெனின்    வினைகொண்டு   முடியும்  வேற்றுமை யுருபேற்ற
பெயர்கள் யாவும் வினையெச்ச மெனப்பட்டு வழுவாகும்.
 

நீவாழ  நீஓங்க   எனச்   செயவெனெச்சம்   வியங்கோட்  பொருளில்
வந்தனவாக    இக்கால   மொழியியலறிஞர்  சிலர்  மயங்குவர்.   வாழிய
வாழியர் வாழ்க  வாழி  என்றாற்போல   இயர், இய என்னும் ஈறுகளானும்
ககர   உயிர்மெய்யீற்றானும்   இகர   உயிரீற்றானும்   வேண்டல், வைதல்,
வாழ்த்தல் (ஆசி)  என்னும்  பொருள்பற்றித்   தற்குறிப்பாக   வருவனவே
வியங்கோளாகும். ஏவலுணர்த்திவரின் முன்னிலை வினையாகும். முன்னிலை
ஏவலைத் தொல்காப்பியம் ஏவல் கண்ணிய வியங்கோட்கிளவி  என விதந்து
கூறும். அஃது, வழா  அலோம்பல்,  மரீஇயதொராஅல் மகனெனல்  மக்கட்
பதடிஎனல், என அல்,  ஆல்  ஈறாக வரும்.  ஆதலின் வாழ, போக, சாவ
என்பவை அகர  ஈற்றனவாய் வினையெச்சமாயே  நிற்கும். இவற்றுள் போக
என்பது