258வினையியல்

'வினை முதலானும்' என்றது   வினைமுதல்  வினையானும்  என்றவாறு.
வினைநிலையானும்  என்றது  பிறவினை முதல் வினையானும்   என்றவாறு.
இயல்   மருங்கென்பது  வினைத்தொகை.   அதனான்  சான்றோர் வழக்கு
இஃதென உணர்த்தியவாறாம்.
 

எ-டு :செய்தென : மழை பெய்தெனப்  புகழ்பெற்றது, மழை பெய்தென
மரங்குழைந்தது  எனவும்,  செய்யியர் : மழை  பெய்யியர் எழுந்தது, மழை
பெய்யியர் பலி கொடுத்தனர் எனவும், செய்யிய : மழை பெய்யிய முழங்கும்,
மழை பெய்யிய வான்  பழிச்சுதும்   எனவும்,   செயின் : மழை  பெய்யின்
புகழெய்தும்,   மழை   பெய்யின்  குளம்  நிறையும் எனவும், செய : மழை
பெய்யப் புகழ் பெற்றது, மழை பெய்ய  மரங்குழைந்தது எனவும், செயற்கு :
மழை   பெய்தற்கு  முழங்கும்,  மழை பெய்தற்குக்  கடவுள்  வாழ்த்துதும்
எனவும், பின் : தலைவனைப் பிரிந்தபின் தலைவி வருந்தினாள்,  தலைவன்
இனிதுண்டபின் தலைவி உவந்தாள்  எனவும்,  முன் : கடுத்தின்னாமுன் நா
துவர்ந்தது,   கடுத்தின்னா  முன்   நோய்   தீர்ந்தது   எனவும்,   கால் :
உரைத்தக்கால்   உரைபல்கும்,   வணங்கி  விடுத்தக்கால் இன்னே வருவர்
எனவும்,   கடை : நல்வினைதான்  உற்றக்கடை   உதவும், நல்வினைதான்
உற்றக்கடை   தீவினை   சேரா   எனவும்,  வழி :  நல்வினை  உற்றவழி
உதவும், நல்வினை  உற்றவழித்   தீவினை   வாரா   எனவும்,  இடத்து :
நல்வினை  உற்றவிடத்துதவும்,  நல்வினை  உற்றவிடத்துத்  தீவினையாயும்
எனவும் வரும். இவ்வாறு தாமியல் மருங்கின் வருவன நோக்கிக் கொள்க.
 

சூ. 234 :

பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி

சொன்முறை முடியாது அடுக்குந வரினும்

முன்னது முடிய முடியுமன் பொருளே

(36)
 

க-து :

வினைஎச்சங்கட்காவதொரு சிறப்பு விதி கூறுகின்றது.
 

உரை : கூறப்பெற்ற   வினையெச்சங்கள்   சொல்தொறும்   முடிக்குஞ்
சொல்லைப் பெறாமல் ஒத்தவாய்பாட்டானும் வேறு  வேறு வாய்பாட்டானும்
அடுக்கினவாகவரினும் முன்னின்றது பின்னிற்பதனொடு  முடியத் தொடர்ந்து
சென்று பொருள் முடிவெய்தும்.
 

அடுக்குநவரினும்  என்றது,  உண்டு  சென்று  கண்டு என அடுக்குதல்.
சொன்முறை முடியாதுவரினும் என்றது, சாத்தன்