கிளவி" எனப் பொதுவாகக் கூறினமையின் அவ்விதி செய்யும் என்னும் முற்று வினைக்கு என்பது பெறப்பட வைத்துச் செய்யும் என்னும் எச்சம் "எஞ்சிய கிளவி" (வினை - 28) என்னும் சூத்திரவிதியே பெறும் என்கின்றது. 'செய்யும்' என்னும் வாய்பாட்டுச் சொல் பற்றிய ஐயமகற்றுதலுமாம். |
உரை: செய்யுமென்னும் வாய்பாட்டுச் சொல் மேற்கூறிய அறுவகைப் பொருளொடு முடியும் தன்மைத்தாய் எச்சமாய் வருதற்கண் 'பல்லோர்படர்க்கை', என்னும் சூத்திரத்தின்கண் நீக்கப் பெற்ற பல்லோர் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகிய மூன்று பகுதியொடும் வருதற்குரியதாகும். |
எ-டு :அவர் வாழும் ஊர், நீ வாழும் ஊர், நீயிர் வாழும் ஊர் யான் வாழும்ஊர், யாம் வாழும் ஊர், நாம் வாழும் ஊர். எனவரும். இனிச் செய்யும் என்னும் முற்றிற்கும் செய்யும் என்னும் எச்சத்திற்கும் வேறுபடாவது: முற்றாயின் ஓர்எழுவாய்க்குப் பயனிலையாகி நிற்கும் - எச்சமாயின் ஓர் எழுவாயின் பெயர்ப் பயனிலைக்கு அடையாகி நிற்கும். |
| சூ. 237 : | பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும் |
| எதிர்மறுத்து மொழியினும் பொருள்நிலை திரியா |
(39) |
க-து : | செய்யும் செய்த எனவும், செய்து செய்யூ செய்பு எனவும் பெயரெச்ச, வினையெச்ச இயல்புகளை விதிவாய்பாட்டான் ஓதினமையின் அவை எதிர்மறையாய் வருமிடத்துத் தாம் எச்சமாய் நின்று அவ்வவ்விலக்கணங்களை ஏற்றலிற்ரியா என அவற்றின்கண் நிகழ்வதோர் ஐயமக றுகின்றது. |
| |
முற்றுவினைகளின் இலக்கணத்தை ஈறுபற்றி ஓதினமையான் அவை விதி வினைக்கும் மறைவினைக்கும் ஒக்குமென்க. பெயரெச்சம் அதிகாரப் பட்டு நின்றமையின் பெயரெச்சகிளவி முற்கூறப்பட்டது. |
உரை : செய்யும் செய்த என ஓதப் பெற்ற பெயரெச்சச் சொற்களும் செய்து முதலாக ஓதப் பெற்ற வினையெச்சச் சொற்களும் எதிர் மறுத்துக் கூறினும் தம் எச்சப் பொருண்மையினின்று திரியா. |
பொருள் நிலையாவது பெயரெச்சம் நிலம் முதலாய பொருட்குரியவாய் முடிதலும் வினையெச்சம் தன்வினைமுதல் வினையொடும் பிறவினைமுதல் வினையொடும் முடிதலுமாம். |
எ-டு :உண்ணா இல்லம், உண்ணாச் சோறு, உண்ணா நாள், வனையாக் கோல், ஓதாப் பார்ப்பான், நடவா நடை |