உரை:தெளிவுகுறித்து வரும் ஏகாரமும், சிறப்புக்குறித்து வரும் ஓகாரமும் அளபெடுத்தலான் ஓங்கிய இசையை உடையவாய் வருமெனக் கூறுவர் புலவர். எடுத்துக் காட்டுக்கள் மேற்காட்டப் பெற்றன. (சூ- 9, 8.) |
| சூ. 263 : | மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை |
| அப்பா லிரண்டென மொழிமனார் புலவர் |
(14) |
க-து: | மற்று என்பதன் பொருட்கூறு இவை என்கின்றது. |
| |
உரை:மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றாதலும், அசை நிலையாதலும் என அதன்பொருட்பகுதி இரண்டெனக் கூறுவர் புலவர். |
எ-டு : "மற்றறிவாம் நல்வினை யாம் இளையம்" என்றவழி நல்வினை பின்னர் இயற்றுவாம் என மாற்றுதலின் வினைமாற்றாயிற்று. அதுமற் றவலங் கொள்ளாது நொதுமற்கழறும், என்பது அசைநிலையாய் வந்தது. |
சூ. 264 : | எற்றென் கிளவி இறந்த பொருட்டே |
(15) |
க-து: | எற்று என்னும் இடைச் சொற்பொருள் இதுவென்கின்றது. |
| |
உரை : எற்று என்னும் இடைச்சொல் காலச் செலவினை உணர்த்தும் பொருட்டாய்வரும். |
எ-டு : எற்றென் உடம்பின் எழில்நலம் : என்றவழி முன்னர் எழிலுடையதாக இருந்த உடம்பு இப்பொழுது எழில் குன்றியமையைப் புலப்படுத்தலின் காலக் கடப்பினை உணர்த்தி நிற்றல் காண்க. என் நலம் இறந்தது எனின் அது கழிவுப் பொருட்டாம் என்க. |
| சூ. 265 : | மற்றையது என்னும் கிளவி தானே |
| சுட்டுநிலை ஒழிய இனங்குறித் தன்றே |
(16) |
க-து: | 'மற்றை' என்னும் இடைச்சொல்லின் பொருண்மை கூறுகின்றது. |
| |
உரை:'மற்றை' எனும் இடைச்சொல் யாதானும் ஒரு பொருளைச் சுட்டும் நிலைமையைத் தவிர்த்து எடுத்த ஒரு பொருளிற்கினமான பொருளைக் குறித்து வரும். |
இச் சொல் பெரும்பான்மையும் யாதானும் ஒரு பால் பற்றிய சுட்டுப்பெயரோடிணைந்து வருமென்பதறிவித்தற்கு 'மற்றையது' என ஓதினார். |