இடையியல்289

சூ. 272 :

அசைநிலைக் கிளவி ஆகும்வழி யறிதல்
[23]
 

க-து :

இதுவுமது.
 

உரை:மேற்கூறப்பெற்ற  ஆரைக்கிளவி   அசைநிலைக்  கிளவியாயும்
வரும், அங்ஙனம் வருமிடம் அறிந்து கொள்க.
 

இதனானும் ஆரைக்கிளவியின்  பொருட்குறிப்புணர்த்துதலே   மேலைச்
சூத்திரத்தின்   நோக்கென்பது    தெளியலாம்.     ஆகும்     என்னாது
"வழியறிதல்" என்றதனான்  அசைநிலையாதல்  இயற்பெயர்   முன்னரன்றி
ஏனைச் சொற்களின் முன்னர் வருமிடத்தேயாம் என்க.
 

எ-டு : "எல்லா  உயிரொடும்  செல்லுமார்  முதலே" (எழு-61) "பெயரி
னாகிய தொகையுமா ருளவே" (சொல் - 61) எனவரும்.
 

சூ. 273 :

ஏயுங் குரையும் இசைநிறை அசைநிலை 

ஆயிரண் டாகும் இயற்கைய என்ப

[24]
 

க-து :

ஏ-குரை, என்னும் இடைச் சொற்குரிய பொருண்மை கூறுகின்றது.
 

உரை : ஏ   என்னும்   இடைச்சொல்லும்    -     குரை   என்னும்
இடைச்சொல்லும் (ஒவ்வொன்றும்)  இசை   நிறையும், அசை நிலையும் என
அவ்இரண்டியல்பின என்று கூறுவர் புலவர்.
 

இயற்கையாவது  பொருட்கூறுபாடு.  பொருளான் ஒத்து வருதலின் ஏயும்
குரையும்  ஒருங்கு  கூறினார்.  இவ்ஏகாரம்  தொடர்மொழியின்  முதற்கண்
தனித்து  வருதலின்  "தேற்றம்  வினாவே"  என்றதனொடு  கூறாராயினார்
என்க.
 

எ-டு : 'ஏஎ  இஃதொத்தன்  என்பெறான்  கேட்டைக்காண்'   (கலி-61)
இஃது இசைநிறை. ஏஎஎன் சொல்லிய  வாறு?   இஃதசைநிலை.  'அளிதோ
தானேயது பெறலருங் குரைத்தே' (புறம்-5)  இஃது  இசைநிறை. 'பல்குரைத்
துன்பங்கள்   சென்று     படும்'    (திருக்குறள்-1045.)  என்பதும்  அது.
அசைநிலையாய் வருதல் வந்துழிக்கண்டு கொள்க.
 

சூ. 274 : 

மாஎன் கிளவி வியங்கோ ளசைச்சொல்
(25)
 

க-து:

மா என்னும் இடைச்சொற்குரிய பொருண்மை கூறுகின்றது.
 

உரை:மா  என்னும்    இடைச்சொல்   வியங்கோளின்கண்   அசை
நிலையாய் வரும்.
 

எ-டு: "உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே" எனவரும்.