314உரியியல்

பொருட்டாய்    வரும்.   (பெற்று -   செல்வம் -   பாக்கியம்   என்னும்
பொருளது)   பெற்று   என்பதனடியாகப்   பிறந்ததே   "பெற்றம்" (ஆன்)
என்பதாகும். பெற்று என்பதற்குப் பெருக்கம் எனப்   பொருள்   கூறுவார்
சேனாவரையார். அது பொருந்துமாறில்லை என்க.
 

எ-டு : ஏகல்  லடுக்கம்  (நற்-116) எனவரும். இது பெயரடையாக வந்து
உரிச்சொல்லாயிற்று.
 

சூ. 306 :

உகப்பே உயர்தல், உவப்பே உவகை
(9)
 

குறிப்பு : இஃது இரண்டு சூத்திரமாக அமைதல் வேண்டும்.
 

உரை:உகப்பு     என்னும்       குறிப்புரிச்சொல்    உயர்தலாகிய
பொருளுணர்த்தி   வரும்.   உவப்பென்னும்   குறிப்புரிச்சொல்   உவகை
என்னும் பொருளுணர்த்தி வரும்.
 

எ-டு : 1) விசும்புகந்   தாடாது   இரைதேர்ந்  துண்ணாது, என வரும்.
இஃது உக் என்னும் குறைச் சொல்லடியாகப் பிறந்த   உகுதல்,  உகுத்தான்,
உகுத்து - உக என்பவற்றினின்று பொருள் வேறுபட்டு வினைப் போலியாய்
நின்று  உரிச்  சொல்லாயிற்று.  2)  உவந்துவந்து   ஆர்வ  நெஞ்சமொடு
ஆய்நலனளைஇ (அகம்-35) எனவரும்.  இது  வெளிப்படு  சொல்லாயினும்
உகரத்தின் பின்வரும் ககர வகரங்கள்  வெவ்வேறு  பொருளின என்பதும்
அவை மயங்கல் கூடா என்பதும் அறிவித்தற்கு  இவற்றை எடுத்தோதினார்.
இனி,     இங்ஙனம்     வரும்    சுளிப்பு-சுழிப்பு     துகைப்பு-துவைப்பு
முதலாயவற்றையும் ஓர்ந்து கொள்க.
 

சூ. 307 :

பயப்பே பயனாம்
(10)
 

உரை:பயப்பு என்னும் குறிப்புரிச்சொல் பயன் என்னும்  பொருட்டாய்
வரும்.
 

எ-டு : ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே (குறள்-354) எனவரும்.
இனி விளைவு என்னும் பொருள்தரும்  'பய'  என்பதனடியாகப்   பயத்தல்,
பயந்தாள், பயக்கும், பயவாக் களரனையர்  எனவரும்  உரியடி வேறு; இது
வேறு. இது தனித்துப் பெயர்ப்போலியாக வரும்.
 

சூ. 308 :

பசப்பு நிறனாகும்
(11)
 

உரை:பசப்பு என்னும் பண்புரிச்சொல் நிறனாகிய பொருட்காகிவரும்.