316உரியியல்

சூ. 313 :

சீர்த்தீ மிகுபுகழ்
(16)
 

உரை:சீர்த்தி   என்னும்    குறிப்புரிச்சொல்   'மிக்கபுகழ்'  என்னும்
பொருளுணர்த்தி வரும். சீர் என்பது  தொழிற்பெயராய  காலை, சீர்த்தான்
சீர்த்தது என வேறு பொருள் உணர்த்தி வருதலின் எடுத்தோதினார். எ-டு :
வயக்கஞ்சால் சீர்த்தி - எனவரும்.
 

சூ. 314 :

மாலை இயல்பே
(17)
 

உரை:மாலை என்னும் குறிப்புரிச் சொல் இயற்கை (தன்மை)  என்னும்
பொருள்பற்றி வரும்.
 

எ-டு : இரவரன்   மாலையன்   (குறிஞ்சி - 239)   எனவரும்.   மால்
என்பதனடியாகப்பிறந்த       நெடுமை,         மயக்கம்,      பொழுது
முதலியபொருளுணர்த்திவரும் சொல்வேறு இதுவேறு.
 

சூ. 315 :

கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்
(18)
 

உரை:கூர்ப்பு கழிவு என்னும் குறிப்புரிச் சொற்கள்  தம்மை  அடுத்து
நிற்கும் பொருளைச் சிறப்பித்துவரும்.
 

எ-டு : துனிகூரெவ்வம் (சிறுபா - 39) எனவும் "சினனே காமம் கழிகண்
ணோட்டம்" எனவும் வரும். இவை வினைப்  போலியாய்ப்  பெயரடையாக
வரும். இவ்வுரிச்சொற்கள் மிகுதிப்  பொருள்  தருவதாக  மயங்கியுரைப்பார்
பவணந்தியார். மிகுதி வேறு உள்ளது சிறத்தல் வேறு என அறிக.
 

சூ. 316 :

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள
(19)
 

உரை:கதழ்  -  துணை  என்னும் குறிப்புரிச் சொற்கள் விரைதலாகிய
பொருள் உணர்த்தி வரும். எ-டு : "கதழ்பரி நெடுந்தேர்" (நற்-223) எனவும்
"துனைபரிநிவக்கும் புள்ளின் மான" எனவும் வரும்.
 

சூ. 317 :

அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்
(20)
 

உரை:அதிர்வு   விதிர்ப்பு   என்பவை   நடுங்குதலாகிய   குறிப்புப்
பொருளைத் தரும்.
 

எ-டு : அதிரவருவதோர் நோய் (குறள்-429) எனவும் விதிர்ப்புற வறியா
ஏமக் காப்பனை (புறம்-20) எனவும் வரும்.