"தட" முதலாய மூன்றும் பெயரடையாக வந்து உரிச் சொல்லாயின. நளிந்தனை வருதல் உடன்றனளாகி (பதிற்-52) என்பதன்கண் வந்த நளிந்தனை என்பது நளிய என்னும் உவம உருபிடைச் சொல்லடியாகப் பிறந்த வினைச்சொல் என அறிக. |
சூ. 325 : | பழுது பயமின்றே |
(28) |
உரை:பழுது என்னும் குறிப்புரிச் சொல் பயனின்மைப் பொருட்டாய் வரும். |
எ-டு : பழுதுகழி வாணாள் எனவரும். இது தனித்துப் பெயர்ப் போலியாய் வரும் உரிச்சொல், ஈண்டு வினைக்குறிப்புப் பொருள்பட நின்றது. |
சூ. 326 : | சாயல் மென்மை |
(29) |
உரை:சாயல் (சாய்) என்னும் பண்புரிச்சொல் மென்மைத் தன்மை உணர்த்திவரும், சாயன் மார்பு நனியலைத் தன்றே (பதிற் - 16) எனவரும். இதுவும் பெயர்ப்போலியாய்த் தனித்து வரும். |
சூ. 327 : | முழுதுஎன் கிளவி எஞ்சாப் பொருட்டே |
(30) |
உரை:'முழுது என்னும் குறிப்புரிச் சொல் எஞ்சாமையாகிய பொருட்குரியதாய் வரும். |
எ-டு : மண்முழுது ஆண்டநின் முன்னோர்போல' என வரும். முழுமை என்னும் பண்புப்பெயர் வேறு இவ்உரிச்சொல் வேறென்க. இது பெயர்ப்போலியாய்த் தனித்துவரும். |
சூ. 328 : | வம்பு நிலையின்மை |
(31) |
உரை:வம்பு என்னும் குறிப்புரிச் சொல் நிலையின்மையாகிய பொருள் குறித்து வரும். எ-டு : வம்ப மாரியைக் காரென மதித்தே (குறு - 66) என வினைப்போலியாய் வரும். |
சூ. 329 : | மாதர் காதல் |
(32) |
உரை:மாதர் என்னும் குறிப்புரிச் சொல் காதல் என்னும் பொருட்டாய் வரும் (காதல் - கவர்ச்சி) எ-டு : மாதர்கொள் மானோக்கின் மடநல்லாய் (கலி - 56) எனவரும். இது பெயர்ப்போலியாய்த் தனித்து வரும். |