சூ. 335 : | வெம்மை வேண்டல் |
(38) |
உரை:வெம்மை என்னும் பண்புரிச் சொல் வேண்டல் என்னும் பொருள் குறித்து வரும். [வேண்டல் - விருப்பம்] |
எ-டு : ஏமவெங் காமம் இயைவ தாயினும் (அகம் - 15) இது பெயர்ப் போலியாய் வரும். |
சூ. 336 : | பொற்பே பொலிவு |
(39) |
உரை:பொற்பு என்னும் குறிப்புரிச் சொல் பொலிதல் என்னும் பொருள்பற்றி வரும். எ-டு : பெருவரையடுக்கம் பொற்பச் சூர்மகள் (அகம் - 15) எனவரும். (பொலிவு - விளங்குதல்) இது வினைப் போலியாய் வரும். அழகென்னும் பண்புப் பெயராகிய பொற்பு வேறு இவ்வுரிச்சொல் வேறு. |
சூ. 337 : | வறிது சிறிதாகும் |
(40) |
உரை:வறிது என்னும் குறிப்புரிச் சொல் சிறிது என்னும் பொருட்காகி வரும். எ-டு : வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற் - 14) எனவரும். இது பெயர்ப்போலியாய்த் தனித்து வரும். |
சூ. 338 : | ஏற்றம் நினைவும் துணிவு மாகும் |
(41) |
உரை:ஏற்றம் (ஏற்று) என்னும் குறிப்புரிச் சொல் நினைதலும் துணிதலும் ஆகிய பொருள்கட்கு ஆகிவரும். |
எ-டு : கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி (குறு - 145) எனவும், ஏற்றமி லாட்டி என்ஏ முற்றாள் (கலி - 144) எனவும் வரும். இது வினைப்போலியாக வரும். |
சூ. 339 : | பிணையும் பேணும் பெட்பின் பொருள |
(42) |
உரை:பிணை என்னும் குறிப்புரிச் சொல்லும் பேணு என்னும் குறிப்புரிச் சொல்லும் பெட்பு என்னும் சொல்லுக்குரிய புறந்தருதல், விரும்புதல், என்னும் பொருளினவாய் வரும். |
எ-டு : "அரும்பினை யகற்றி வேட்ட ஞாட்பினும்" எனவும் "யானும் பேணினல்லனோ மகிழ்ந" எனவும் வரும். பிணை என்னும் வெளிப்படவாரா உரிச்சொல் உணர்த்துவர் அப்பொருட்டாகிய பேண் என்னும் வெளிப்படு சொல்லையும் உடன் ஓதினார். பிணை என்பது பெயர்ப்போலியாக வரும். |