மூன்று இயல்களிலும், பெயர் வினை இடை உரி என்ற தனிச்சொல் நான்கனையும் பற்றிய செய்திகளை அடுத்த நான்கு இயல்களிலும் சொல்லுள் எஞ்சியவற்றை எச்சவியலிலும் ஆசிரியர் குறிப்பிடுவதாகத் தெரிவிக்கிறார். இவ்வுரையாசிரியர் ஆராய்ச்சிக்குத் தெய்வச்சிலையார் ஓரளவு வழிகாட்டுகிறார். |
"யாதானும் ஒரு சொல்லை இருதிணை ஐம்பாலுள் ஒன்றற்கு உரியதாக ஆக்கிக்கொள்ளுதலும், செப்பும் வினாவுமாக வரும் தொடர்மொழிகளை வழுவின்றி ஆக்கிக் கொள்ளுதலும், இலக்கண வரையறையிற் சிறிது பிறழ்ந்து வரினும் சான்றோர் வழக்காய்ப் பொருளுணர்ச்சி திரியாமல் மரபாக வருவனவற்றை மரபாக மேற்கொள்ளுதலும் ஆக்கமாம்.-கிளவி : தனிமொழி, தொகைமொழி, தொடர் மொழிகளுக்குப் பொதுவாக நின்றது. |
வழுவை நீக்கிக் கொள்ளுதல் ஆக்கம் ஆகாது" என்று கிளவியாக்கத்துக்கு விளக்கங் கூறி அதனை அவ்வியல் முழுதும் பொருத்திக் காட்டுகிறார் - பக் (24, 25). |
ஆவும்ஆயனும் செல்க, என்புழித் திணை விராய் எண்ணுதல் வழுவமைதி எனின், இதற்கு வழாநிலை வடிவம் யாது? என்ற வினா பொருட் சிறப்புடையது (பக்-70) மக்கட்சுட்டு என்பதன் விளக்கம். (பக்-26) பவணந்தியார் 'மக்கள் தேவர் நரகர் உயர்திணை' என்ற கூற்றின் பொருத்தமின்மை (பக்-28, 29) அஃறிணையில் ஒன்று பல என்ற பாகுபாடே கொண்டதன் கருத்து (பக்-31) பேடன் வந்தான் என்ற தொடர் பொருந்தாதெனல் (பக்-33). |
னஃகான் ஒற்று முதலியன ஆடூஉவறிசொல் முதலியவற்றின் ஆக்க இலக்கணம் கூறுதற்கே எழுந்தன என்பது (பக்-34, 35) பகர உயிர்மெய் பலர்பாலையும் வகர உயிர்மெய் பலவின் பாலையும் ஆக்க உதவுவன எனல் (பக்-38) 'தம்மரபினவே' என்ற தொடரின் விளக்கம் (பக்-41, 42) தொடர்மொழியாக்கத்தின்கண் மயங்கல் கூடா என விதித்த திணை முதலிய ஐந்தும் 'செப்பினும் வினாவினும் வழுவாமற் போற்றுக' என்று கூறி இவ்வியல் முழுதும் செப்பும் வினாவுமாக அமையும் தொடர் பற்றியதே என்பதைச் சுட்டுதல் (பக்-44), சுட்டு முதலாகிய காரணக்கிளவி அதனால் என்பதன்று 'அதனான்' என்பதே - என்பது பற்றிய விரிவான விளக்கம் (பக்-65) |
"தன்மைச் சொல்லே ............ வரையார்" என்பது பெயர் பற்றிய விதியாதலின், அது, "பன்மையுரைக்கும் தன்மைக்கிளவி ............ உளவே" என்ற நூற்பாவில் அடங்காது எனல் |