சான்றோர் எல்லோருக்கும் உடன்பாடான செய்திகளாக இருத்தல் வேண்டும்
என்பது வற்புறுத்தப்படவில்லை.
 

இவையேயன்றி இவ்வுரைகாரர் ஒருசில  நூற்பாக்களில் சில திருத்தங்கள்
செய்துள்ளார்.  சில  நூற்பாக்கள்  விடுபட்டிருக்கலாம் என்றும் கருதுகிறார்.
அவற்றை நிரலே காண்போம்.
 

சூ. 18:-

இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
வழக்கா றல்லாச் செய்யு ளாறே.

 

சூ. 38:-

சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவா
இயற்பெயர் வழிய என்மனார் புலவர்

 

சூ. 44:-

ஒருமை எண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது

 

சூ. 132:- 

அண்மைச் சொல்லிற்கு அகரமும் ஆகும்
 

சூ. 183:-

பன்மை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றே பலவே ஒருவர் என்னும்
அன்றிப் பாற்கும் ஓரன் னவ்வே.

 

சூ. 408:-

அடிமறிச் செய்தி அடிநிலை திரியாது
சீர்நிலை திரிந்து தடுமா றும்மே

 

சூ. 409:-

பொருள்தெரி மருங்கின் ஈற்றடி இருசீர்
எருத்துவயின் திரிபும் தோற்றமும் வரையார்

(தெய்வச்சிலையார் பாடமும் அன்று)

 

சூ. 425:-

உரைசொல் லடுக்கே மூன்றுவரம் பாகும்
 

சூ. 221:-

ஆகிய,  'இன்றில  உடைய'   என்பதனையடுத்துப்  பொருளும்
இடமும் செய்கையும்  பற்றி  அஃறிணை  வினைக்குறிப்பு வரும்
என்னும்  பொருள்பட   அமைந்த   நூற்பா   ஒன்று  இருந்து
மறைந்திருத்தல் வேண்டும் (பக்-259)

 

236ஆம்  நூற்பாவையடுத்து;  "பன்முறை  யானும்  பெயரெஞ்சு கிளவி
சொன்முறை  முடியாது  அடுக்குந  வரினும்  முன்னது  முடிய  முடியுமன்
பொருளே"  என்றொரு  நூற்பா   இருந்து   மறைந்திருத்தல்  வேண்டும்.
(பக்-237)
 

இவையேயன்றித்  தெய்வச்சிலையாரைப்   பின்பற்றி   'வாரா  மரபின'
(சூ. 422) என்ற நூற்பாவையடுத்து "இசைநிறை அசைநிலை ... ... அடுக்கே"
என்ற நூற்பாவை அமைத்துள்ளார்.