சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

114

லகார ளகார ஈற்றுப் பெயர்கள் விளி ஏற்குமாறு
 

147.
 

எஞ்சிய இரண்டின் இறுதிப் பெயரே
நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும்.
 

என் -  எனின்,  நிறுத்த  முறையானே  லகார  ஈறும்  ளகார ஈறும்
விளியேற்குமாறு உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)லகார  ளகாரம்  என   எஞ்சிய  இரண்டெழுத்தினையும்
இறுதியாகவுடைய   பெயர்கள்   ஈற்றினின்ற  எழுத்திற்கு  அயலெழுத்து
நீண்டு விளியேற்றல் வேண்டும், (எ - று.)

(எ - டு.) குரிசில்  -  குரிசீல்,  தோன்றல்  - தோன்றால், மக்கள் -
மக்காள் எனவரும்.                                        (27)

எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல்
 

148.

அயல்நெடி தாயின் இயற்கை யாகும்.
 

என் - எனின், எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் நுதலிற்று.

(இ -  ள்.) அவ்விரண்டு  ஈற்றுப்பெயரும்  ஈற்றயலெழுத்து  நீண்ட
நிலைமையவாயின் இயல்பாய் விளியேற்கும், (எ - று.)

(எ - டு.) ஆண்பால், பெண்பால், ஏமாள், கோமாள் எனவரும். (28)

இதுவுமது
 

149.

வினையினும் பண்பினும்
நினையத் தோன்றும் ஆள்என் இறுதி
ஆயா கும்மே விளிவயி னான.
 

என்   -   எனின்,  அவ்விரண்டீற்றுள்  ளகார  ஈற்றிற்கு  எய்தியது
விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று.

(இ- ள்.) வினையினானும், பண்பினானும் ஆராயத் தோன்றும்  ஆள்
என்னும் இறுதி விளிக்குமிடத்து ஆயாய் விளியேற்கும், (எ -று.)

(எ - டு.) உண்டாள்  -  உண்டாய்  எனவும்,  கரியாள்  - கரியாள்
எனவும் வரும்.                                            (29)

இதுவுமது
 

150.

முறைபெயர்க் கிளவி முறைப்பெய ரியல.