சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

142

என் - எனின்,  செய்யுள்  இடத்து  விரவுப்  பெயர்  வருவது  ஓர்
முறைமை கூறுதல் நுதலிற்று.  

(இ - ள்.)   அச்   செய்யுட்களில்   கருப்பொருள்   கூறும்   வழி
கிளக்கப்படும்  இயற்பெயராகிய  விரவுப்பெயர் உயர்திணை யுணர்த்தாது
அஃறிணைப்  பொருள்   உணர்த்தும்,   அதற்குக்  காரணம்  என்னை
எனின்,   அவ்வந்    நிலங்களி   னிடமாகிய    இடத்து  அவற்றுக்கு
உறுப்பாய்த் தோன்றுதலான், (எ - று.)  

(எ - டு.)  “கடுவன்  முதுமகன்  கல்லா மூலர்க்கு வதுவை யயர்ந்த
வன்பறழ்க்  குமரி” என வரும். இவை அஃறிணையை  நோக்கி நின்றன
எனக் கொள்க,  

மற்று     இவ்விரவுப்  பெயர்கள்  கருப்பொருள்களுள் அந்நிலத்து
மக்கட்பெயராய்  உயர்திணை  மேல்வரின் என்னை குற்றம் என்றார்க்கு
அவ்வம்மக்களை   இவ்விரவுப்   பெயர்களால்   கூறுதல்   சான்றோர்
செய்யுட்கண்  கண்டிலாமையின்  அது   மரபு  அன்று   என்றாரெனக்
கொள்க.                                               (42)

எய்தியது விலக்கல்
 
  

200.

திணையொடு பழகிய பெயரலங் கடையே.
 

என் - எனின், எய்தியது விலக்குதல் நுதலிற்று,  

(இ - ள்.)   செய்யுளுள்    உயர்திணை    யுணர்த்தாது   நிற்பது
இவ்வைந்திணையோடும்   அடிப்பட்டு  அவ்வைந்திணை உடையானாது
உடைமைக்   கிழமை   உணர்த்தி  நிற்கும்  பெயர் அல்லாத இடத்துக்
கண்ணே;  ஆண்டாயின்  உயர்திணையை  உணர்த்தும்,  (எ - று.)  

கழனி   ஊரன்   என்பது   போல்வன   செய்யுட்கண்  இறைச்சிப்
பொருட்டாய் வந்தும் உயர்திணையை நோக்கியவாறு கண்டு கொள்க.  

மேல்     உயர்திணை  சுட்டா  என்றது விரவுப் பெயர்க்கு அன்றே
இவை உயர்திணைப்  பெயர்  ஆயினமையின் எய்தியது வில,,,,,,,,,திணை
சுட்டா  என்று  ஒழிவதன்றி நிலத்துவழி  மருங்கிற் றோன்றலான என்று
காரணம்  கூறினமையின்   உயிர்திணை  பெயரானவற்றிற்கும்  இவ்விதி
எய்தும்   கொல்லோ   என்று   மாணாக்கள்  ஐயுறுவானாயினு...........று
போலும்.                                               (43)  

ஐந்தாவது பெயரியல் முற்றிற்று.