என் - எனின், மேல் நிறுத்த முறையானே உயர்திணை யுணர்த்துதல் நுதலிற்று. உயர்திணை வினைதாம், தெரிநிலை வினையும் குறிப்பு வினையும் என இருவகைய; அவற்றுள், தெரிநிலை வினை முன்னுணர்த்திய வெடுத்துக் கொண்டார். அதுதானும் தன்மை வினையும் படர்க்கை வினையும் என இருவகைத்து. அவற்றுள் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான், தம்மைதானும் உளப்பாட்டுத் தன்மை தனித்தன்மை என இருவகைத்து, அவற்றுள் உளப்பாட்டுத் தன்மை முன் உணர்த்திய தொடங்கினான் என உணர்க. (இ - ள்.) மேற் பகுக்கப்பட்ட வினையின் முப்பாகுபாடும் ஆகிய அவையாமாறு இனிச் சொல்லுவல்; அம் ஆம் எம் ஏம் என்னும் ஈற்றையுடைய நான்குவகைச் சொற்களும், உம்மொடு வருகின்ற கும், டும், தும், றும் எனப்படுகின்ற அந்நான்கு ஈற்றுச் சொல்லுமாகிய அவ்வெட்டுச் சொல்லும், அவன் தன்னோடு பிறனையும் கூட்டிப் பன்மையினைச் சொல்லும் தன்மைக்கு உரிய சொல்லாம், (எ - று.) 2‘அம் - தாய்வரும்.’ (எ - டு.) அம் : - உண்டனம், உண்டிலம்; உண்ணாநின்றனம், உண்கின்றனம்; உண்ணாநின்றிலம், உண்கின்றிலம் ; உண்பம், உண்குவம், உண்ணலம் எனவரும். இவற்றுள் நிகழ்காலம் நிற்கின்.................னம் என்றாற்போல வரும் வாய்பாட்டு விகற்பமும் அறிக.
1. ‘அவைதாம்’ என்னும் சொல் தெய்வச்சிலையார் உரையில் இல்லை. 2.இப்பகுதி சிதைந்துள்ளது. |