சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

48

பொதுச்     சூத்திரத்துள் இரண்டையும் ஒன்றாக அடக்கி,  ஈண்டு
அதன்  பாகுபாடு  தோன்ற விரித்துக் கூறினவாறு போலும்.  அதனால்
சூத்திரத்து இனமுஞ் சார்பும் என்பனவற்றை முன்னின்ற  வினையோடு
தொடர்புபடப் பொருள் உரைத்துக் கொள்க.                  (53)

மேலதற்கோர் புறனடை
 
  

54.

1ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்.
 

என்  -  எனின் மேற் சூத்திரத்திற்கோர்  புறனடை  உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.)மேற்கூறிய வினை வேறுபடூஉம் பல பொருளொரு  சொல்,
வினையான் வேறுபட நில்லாது பொதுவாகிய வினையோடு  பொருந்திப்
பொருட் பொதுமைப்பட நின்றுழியும், மேல் வினையான் வேறுபட்டாற்
போல  இன்னது  இது வென வேறுபட நிற்றலும் வழக்கிடத்து உண்டு,
(எ - று.)

(எ - டு.) மா வீழ்ந்தது என்பது, வீழ்தல் வினை எல்லா மாவிற்கும்
பொதுவே  யெனினும், இவ்விடத்து இக்காலத்து இவடன சொல்லுகிறது
இம்மாவினை  யென்று  உணர நிற்கும் என்றவாறு. என்றது முன்கூறிய
வினைவேறுபடாப்   பலபொரு  ளொருசொல்லும்  ஒருநிலைமைக்கண்
வினை வேறு  படூஉம்  பல  பொருள் ஒருசொற்போல உணர நிற்கும்,
(எ-று.)

அஃதேல்  பல  பொருள் ஒரு சொல்லினை இரண்டாக ஆக்கியது
என்னை   ஒன்றே ஆகற்பாற்றெனின்,  அவ்வாறு  ஒன்றாயதனையே
உணர்தல்  வேற்றுமை   நோக்கி   இரண்டாகப்   பகுத்தார்   என
உணர்க.                                              (54)

வினை வேறுபடாஅப் பலபொருளொருசொல்
 

55.

வினைவேறு படாஅப் பலபொருள் ஒருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.
 

என் -  எனின்.  வினை   வேறுபடாப்  பலபொருளொரு   சொல்
ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வினையினான்   வேறுபடாத  பல  பொருள் ஒருசொல்
ஆராயுங்காலத்து     இன்னது     இது     எனக்    கிளக்கப்பட்ட
ஆராய்ச்சியையுடைய இடத்து நடக்கும், (எ - று.)

(எ - டு.) கன்று  நீர்   ஊட்டுக   என்புழிக்   கேட்டான்   இன்ன
கன்றென்பது  அறியானாமே  யெனின்,  ஆன்கன்று,  எருமைக்கன்று,
பூங்கன்று எனக் கிளந்து சொல்லுக.


1 இந் நூற்பாவினை அடுத்த நூற்பாவோடு இணைத்து ஒரே நூற்பா
வாகக் கொள்வர் சேனாவரையர்.