சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

49

‘நினையுங்காலை’     என்றதனான் கிளவாது கூறினால் கருமச்சிதை
வுண்டெனிற்  கிளந்து  கூறுக; அல்லுழி வேண்டியவாறு கூறுக என்பது
பெறப்பட்டது.  1‘கன்றாற்றுப்  படுத்த  புன்தலைச்  சிறார்’  என்புழிக்
கருமஞ்    சிதைந்தது   என்பதின்மையின்   கிளவாது   சொல்லவும்
அமைந்தது என்பது.

எனவே பலபொருள் ஒரு சொல் வேறுபடுவினையான் உணரப்பட்டு
நிற்றலும்,   வேறுபடுவினையின்றிப்  பொதுவினையான்  உணரப்பட்டு
நிற்றலும்,  பொதுவினையால் கருமச்சிதை வுள்வழிக் கிளந்து சொல்லப்
பட்டு  நிற்றலும்,  கருமச்சிதை  வுள்வழிப் பொதுவினையாற் கிளவாது
சொல்லப்பட்டு  நிற்றலும் என நான்குபகுதிப்பட்டது என உணர்க. இச்
சூத்திரங்காளற்   கூறியது   பலபொருள்  ஒரு  சொல்  வினைபற்றிப்
பிறக்கும் மரபிலக்கணப் பாகுபாடு என உணர்க.               (55)

மரபு வழுக்காத்தல்
 

56.

குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி.
 

என் - எனின்,   இதுவுமோர்   செயற்கைப்   பொருளின்  மேல்
மரபுவழுக் காத்தல் நுதலிற்று.

(இ - ள்.) உலகத்   தொப்ப   முடிந்த   பொருளை   ஒவ்வாமற்
சொல்லக்குறித்தவன்  சொல்லுஞ்  சொல்லாதற்கு  ஓர் காரணங் கூறிக்
கூறுஞ்சொல்லாயிருக்கும், (எ - று.)

(எ - டு.) பல்லார்தோ டோய்ந்து வருதலாற் 2பூம்பொய்கை  
           நல்வய லூரநின் றார்புலால்-புல்லெருக்க
           மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையால்
           காதற்றாய் நாறு மெமக்கு.

இதனால் சொல்லியது, ஓர் இயற்கைப்பொருள் ஓர் இயற்கையாக ஓர்
காரணங்கருதிக் கூறுமிடத்துத்  தான்  கருதிய காரணத்தினை விளங்கச்
சொல்லுகவென  ஓர்  மரபாராய்ச்சி  கூறியவாறு.  இதுவும்  ஓர்  மரபு
வழுவமைதிபோலும்.                                      (56)

சில உயர்திணைப் பெயர் அஃறிணை முடிபு கோடல்
 

57.

குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொ [லென் (று)


1குறுந்தொகை 241. 2 பாய்புனல் என்பதும் பாடம்.