120

வெள்

இ-ள் : பே,  நாம்,  உரும்  என்னும்  மூன்று சொற்களும் அச்சம்
என்னும் குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘மன்ற  மராஅத்த பேமுதிர்கடவுள்’ எனவும், ‘நாமநல்லரா’
எனவும், ‘உருமில் சுற்றம்’ எனவும் அச்சமாகிய குறிப்பு உணர்த்தின.

நாம் நாம எனத்திரிந்து வழங்கிற்று.

ஆதி

பொருள் : பேம்-பேய்-அச்சம்தரு
நாம்-நாம்-அச்சம்தரு
உரும்-இடி-அச்சம்தரு

குறிப்பு : அஞ்சி   விழிப்பவனைப்  பார்த்துப் பேபே  என
விழிக்கிறான், பேந்தப்பேந்தவிழிக்கிறான் என்பதும்,
அச்சப்படுத்துதலின் ‘பேஎய்’க்கு அப்பெயர் வந்தது
என்பதும் இங்கு நினைவு கூறலாம்.

வய
 

360.

வய வலியாகும்                            (69)
 

ஆ. மொ. இல.

‘Vaya’ means strength

ஆல்.

‘Vaya’ means strength

பி. இ. நூ.

நேமி. சொ. 58

வயம் வலியாகும்

இளம்

வ-று : 1‘வாள்வரி  வேங்கை  வயப்புலி’   (அகம் 69)   என்பது,
வலியுள்ள புலி என்பதாம்.

சேனா.

இ-ள் : (360, 361, 362  எண்கள்  உள்ளவற்றிற்குச் சேர்த்து உரை
எழுதப்பட்டுள்ளது. 362ல் பார்க்க)


1. பொருள் : ஒளியுள்ள கோடுகளையுடைய வேங்கையாகியவலிய
     புலி.