123

தெய்.

இ-ள் : துயவு என்னும்  சொல்  அறிவின் திரிபாகிய பொருள்படும்,
எ-று.

உ-ம் : ‘துயவுற்றேம் யாமாக’

நச்.

இது குறிப்பு.

இ-ள் : துயவு  என் கிளவி  அறிவின் திரிபேதுயவு என்னும் சொல்
அறிவினது திரிதலாகிய குறிப்பு உணர்த்தும், எ-று.

உ-ம் :  ‘துயவுற்றேம் யாமாக’ என வரும்.

வெள்.

(சூ. 360, 361, 362ன் உரை)

இ-ள் :  வய  என்னும் சொல் வலியாகிய குறிப்புணர்த்தும்;  வாள்
என்னும்  சொல்  ஒளியாகிய  பண்புணர்த்தும்;  துயவென்னும்  சொல்
அறிவு வேறுபடுதலாகிய குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘துன்னருந்  துப்பின் வயமான்’  எனவும்,  ‘வாண்  முகம்’
எனவும், ‘துயவுற்றேம் யாமாக’ எனவும் வரும்.

ஆதி

பொருள் : துயவு---.....--- அறிவு மாறுபட்ட

உயா
 

363.

உயாவே யுயங்கல்                             (72)

(உயாவே உயங்கல்)
 

ஆ. மொ. இல.

‘uya’ is distress or suffering

ஆல்

‘uya’ means suffering

இளம்.

வ-று : ‘பருந்திருந் துயாவிளி பயிற்று மியாவுயர் நனந்தலை’ (அகம்.
19) என்றக்கால், உயங்குவிளி பயிற்று என்பதாம்.


1. பொருள் : பருந்துதங்கி வருத்தத்துடன் கூவிப்பயிற்றும் யாமரம்
               உயர்ந்த அகன்ற இடம்.