127

இளம்.

வ-று : ‘கறுத்து வந்தார்’ என்பது, வெகுண்டு வந்தார்   என்பதாம்.

       ‘சிவந்து நோக்கினார்’ என்பது வெகுண்டு  நோக்கினார்
என்பதாம்.

சேனா

இ-ள் : 1‘நிற்கறுப்பதோர்  அருங்கடி  முனையள்’  எனவும்   2‘நீ
சிவந்திறுத்த  நீரழி  பாக்கம்’  (பதிற். 13) எனவும், கறுப்பும்  சிவப்பும்
வெகுளியாகிய குறிப்புணர்த்தும், எ-று.

கருமை  செம்மை  யென்னாது  கறுப்புச் சிவப்பு என்றதனான்
தொழிற்பட்டுழியல்லாது அவை வெகுளியுணர்த்தாமை கொள்க.

தெய்.

இ-ள் : கறுப்பு     என்பதும்  சிவப்பு  என்பதும் வெகுளி என்பதன் பொருளையுடைய, எ-று.

உ-ம் : 3நிற்கறுத்தோர்அரும் அரணம்  போல,  ‘நீ சிவந்திறுத்த
நீரழிபாக்கம் (பதிற். 13).

நச்.

இதுவுமது.

இ-ள் : கறுப்பும்  சிவப்பும்   வெகுளிப்   பொருள - கறுப்பும்
சிவப்பும்  வெகுளியாகிய  குறிப்புப்  பொருண்மையை யுடைய, எ-று.

உ-ம் : ‘நிற்கறுத்தோர் அருங்கடி முனையரணம் போல’ 
       ‘நீசிவந திறுத்த நீரழி பாக்கம்’             (பதிற். 13)

எனவரும்.

கருமை   செம்மை    யென்னாது    கறுப்பு    சிவப்பு   எனத்
தொழிற்படுத்தினார்; அவை வெகுளியை      யுணர்தினமையின்.

வெள்  

இ-ள் : கறுப்பு சிவப்பு  என்னும்  உரிச்சொற்கள்     இரண்டும்
வெகுளியாகிய   குறிப்புணர்த்துவன,  எ-று.


பொருள் :1. நின்னை வெகுள்விப்பதோர் அரிய  காவலமைந்த
              போர் முனையிடத்தான்

        2. நீ     வெகுண்டு      தானையுடன்    தங்கி
              முற்றுகையிட்டதனால்   நீர்மையழிந்த பேரூர்கள்.

            3. நின்னைக் கோபித்தோரது அரிய அரணம் போல.