தெய் இ-ள் : மேற்சொல்லப்பட்ட கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருட்கண் வருதலன்றி நிறத்தரு உணர்த்தற்கும் உரிய, எ-று. உ-ம் : ‘கறுத்த காயா’, சிவந்த காந்தள்’ (பதிற். 15) நச். இஃது எய்தியதன் மேற் சிறப்பு விதி. இ-ள் : நிறுத்து உரு உணர்த்தற்கும் உரிய என்ப-கறுப்பு சிவப்பு எனத் தொழிற்படுத்துக் கூறிய சொற்கள் வெகுளியேயன்றி நிற வேறுபாடாகிய பண்பு உணர்த்துதற்கும் உரிய என்று கூறுவர் ஆசிரியர், எ-று. இவை தொழிற்பட்டுழியும் பண்பு உணர்த்தும் என வெளிப்படு சொல்லையும் கூறினார், ஐயம் அகற்றுதற்கு. உ-ம் : ‘கறுத்த காயா’ ‘சிவந்த காந்தள்’ (பதிற். 15) என வரும். முதல் சினைமுதல். வெள். இ-ள் : கறுப்பு சிவப்பு என்பன வெகுளியே யன்றி நிற வேறுபாடுணர்த்தற்கும் உரிய, எ-று. உ-ம் : ‘கறுத்த காயா’ ‘சிவந்த காந்தள்’ என வரும். நொசிவு, நுழைவு, நுணங்கு. |