ஆ.மொ.இல. The word ‘Puniru’ means the state of having recently calved. ஆல். The morpheme ‘Puniŗu’ gives the sense of the time immediately after giving birth to. பி. இ. நூ. நேமி. சொ. 59 புனிறு ஈன்றணிமை இளம். வ-று : 1‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம் 56) என்பது, ஈன்றணிய வாய்ப்பாய்தென என்பதாம். சேனா. இ-ள் : ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம் 56) எனப் புனிறுஎன்பது ஈன்றணிமையாகிய குறிப்புணர்த்தும், எ-று. தெய். இ-ள் : புனிறு என்பது ஈன்றணித்து என்னும் பொருள் பட்டு நிற்கும், எ-று. உ-ம் : ‘புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி’ (அகம் 56) நச். இது குறிப்பு. இ-ள் : புனிறு என் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே - புனிறு என்னும் சொல் ஈன்றணிமையாகிய குறிப்புப் பொருளுடைத்து, எ-று.
1. பொருள் : ஈன்ற அணிமையுடைய பசு பாய்ந்ததாகக் கலங்கி. |