133

தெய்.

இ-ள் : நனவென்பது  களன்  என்பதன்  பொருண்மையும் அகலம்
என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நனவுப்  புகு  விறலியிற்  றோன்று  நாடன்’ (அகம் 82)
இது களம். ‘நனந்தலை யுலகம்’ (பதிற். 63) - இது அகலம்.

நச்.

இதுவுமது.

இ-ள் : நனவே   களனும்  அகலமும் செய்யும் - நனவு  களனும்
அகலமுமாகிய குறிப்புப் பொருண்மையையுணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நனவுப் புகு விறலியிற் றோன்று நாடன்’ (அகம் 82)
‘நனந்தலை யுலகம் வளைஇ’ (முல்லை1) எனவரும்.

வெள்.

இ-ள் : நனவு   என்னும்   உரிச்சொல்  களன்  அகலம்  ஆகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘நனவுப்  புகு  விறலியிற்  றோன்று  நாடன்’     எனவும்,
‘நனந்தலை     யுலகம்’     எனவும்     களனும்     அகலமுமாகிய
குறிப்புணர்த்தியது.

ஆதி.

பொருள :நனவுவிழிப்புஆட்டமாடும் இடம், விரிவான

மத
 

371.

மதவே மடனும் வலியு மாகும்                  (80)

(மதவே மடனும் வலியும் ஆகும்)
 

ஆ. மொ. இல.

‘Mathavu’ means youth and strength

ஆல்.

‘Matavu’ means youth and strength

பி. இ. நூ.

இல. வி. 2829

மதவே மடனும் வலியும்

இளம்.

வ-று : 1‘மாதர் வாண்முகம்  மதைஇய  நோக்கே (அகம்  130)
என்பது, மடம்பட்ட நோக்கு என்பதாம்.


1. பொருள் : காதல்      உள்ள     ஒளிமிக்க     முகத்தில்
               மடமையான பார்வை.