134

‘மத களிறு’ என்றக்கால் வலிய களிறு என்பதாம்.

சேனா.

இ-ள் : 1‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்’ (அகம் 14) எனவும்,
2‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு’ (அகம் 36) எனவும், மதவென்பது
மடனும் வலியுமாகிய குறிப்புணர்த்தும், எ-று.

தெய்.

இ-ள் : மதவென்னும்  சொல் மடம் என்பதன்   பொருண்மையும் 
வலி என்பதன் பொருண்மையும் உணர்த்தும், எ-று.

உ-ம் : பதவு மேய்ந்த மதவு நடை நல்லான் (அகம் 14)
- இது மடம். ‘கயிறிடு கதச்சேப் போல மதமிக்கு (அகம் 36)
- இது வலி.

நச்.

இதுவுமது.

இ-ள் : மதவே மடனும் வலியும் ஆகும்- மத மடனும் வலியுமாகிய
குறிப்புணர்த்தும், எ-று.

உ-ம் : ‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்’ (அகம் 14)
          ‘கயிறிடு கதச்சேப்போல மதமிக்கு’ (அகம் 36)

என வரும். ‘மதவுநடை’  என்பதில்  மத  மதவு  என  ஈறு  திரிந்து
நின்றது.

வெள்.

இ-ள் : மதவென்னும்  உரிச்சொல்  மடம்,  வலி  ஆகிய  குறிப்பு
உணர்த்தும், எ-று.

உ-ம் : ‘பதவு மேய்ந்த மதவு நடை நல்லான்’  எனவும்,  ‘கயிறிடு
கதச் சேப்போல மதமிக்கு’     எனவும்   மடனும்      வலியுமாகிய
குறிப்புணர்த்தியது.

ஆதி.

பொருள் : மதவு - மதங்கொண்ட - வலிய


1. பொருள் : புல் மேய்ந்த மடமை (இளமை)யான நல்ல பசு.

2. பொருள் : மூக்கில் கயிறு இட்டு இழுக்கப்படும் கோபமிக்கஎருது
                போல வலி மிகுந்து