நச். இது எய்தியதன்மேற் சிறப்புவிதி. இ-ள் : மிகுதியும் வனப்பும் ஆகலும் உரித்தே - மதமடனும் வலியுமே யன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்பும் சிறுபான்மை உணர்த்தும், எ-று. உ-ம் : ‘பேராரா ஏற்றின் பொருநா கிளம்பாண்டில் தேரூரச் செம்மாந் ததுபோல் மதைஇயினன்’ (கலி. 109) ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ (அகம். 130) எனவரும். இவையும் ஈறு திரிந்தன. வெள். இ-ள் : மத வென்னுஞ் சொல் மடனும் வலியுமேயன்றி மிகுதியும் வனப்புமாகிய குறிப்பும் சிறுபான்மை யுணர்த்துதற்குரியதாம், எ-று. உ-ம் : ‘மதவிடை’ எனவும். ‘மாதர் வாண்முகம் மதைஇய நோக்கே’ எனவும் மத வென்பது மிகுதியும் வனப்புமாகிய குறிப்புணர்த்தியது. ‘மதவிடை என்புழி மிகுதி’ என்றது உள்ள மிகுதியினை. ஆதி. பொருள் : மதவு - மதத்தைத்தழுவிய மிகுதி,- வனப்புடைய. யாணர் |